India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டீ, காபியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக போட்டு குடிப்பீங்களா? அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய காரணம். இவை, இதயத்தை தான் கடுமையாக பாதிக்கும். புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவற்றையும் வரலாம். மேலும், சிந்திக்கும் திறனையும் இது பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த அவர், டிவின்ஸ் ஆப் ஈவில், SHOGUN, பைரேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் டிவின்ஸ் ஆப் ஈவில் படம், அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. supranuclear palsy எனும் ஒருவகை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
J & K பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ்) 15 பேர் உதவியதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Purdue பல்கலை. விஞ்ஞானிகள், தூய வெள்ளை நிற பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இது 98.1% சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டது என்பதால், பருவநிலை மாற்றம், ஆற்றல் சேமிப்பிற்கான தீர்வாக கருதப்படுகிறது. இந்த பெயிண்ட்டை பூசுவதன் மூலம், மின்சாரம் இல்லாமலேயே, அறையின் வெப்பநிலையை 8°F-ஆக குறைக்கலாம். புவி வெப்பமயமாதலை தடுக்க இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Share it.
செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
ஹாட்ரிக் வெற்றியை பெற GT அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க RR அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள GT, இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள RR-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டது. ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினின் தாயார் அம்மாளுக்கு சென்னை தனியார் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக இருப்பதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.