India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் ‘Flipkart Big Billion Days – 2024’ விற்பனை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இருப்பினும் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் 29ஆம் தேதி முதல் சில சலுகைகளை அனுபவிக்க முடியும். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50-80% தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் பல அதிரடி சலுகைகளும் காத்திருக்கின்றன.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என நம்புவதாகவும் வேதனை தெரிவித்தார். மருத்துவர்கள் போராட்டம் முடியாததால், மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ராணுவத்தை குவித்து விட்டு, சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக் கூடத்திற்கு எடுத்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனை, www.tnpsc.gov.in, www.tnpscexams.in தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஏர்டெல் CEO கோபால் விட்டல், ஜியோ, BSNL, வோடஃபோன் -ஐடியா, டாடா டெலிசர்வீஸ் நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். Spam அழைப்புகள் மூலம் மோசடிகள் நடைபெறுவதை தடுக்க, டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இணைப்புகள் குறித்த தரவுகளை மாதந்தோறும் அனைவரும் பகிர்ந்தால், அதைக் கண்காணித்து மோசடிகளை தடுக்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது இந்தியா. இன்றைய ஆட்டத்தின்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது 200வது கோலை அடித்தார். செப்.14ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
‘ஜவான்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் ₹1,100 கோடி வசூலித்தது. ராணுவ தளவாட கொள்முதலில் ஊழல் என்ற இப்படத்தின் புதுமையான கதைகளம் வெற்றிக்கு உதவியது. படித்தவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுங்கள் என படம் பேசிய அரசியலை, நமது அரசியல் தலைவர்களும் எதிரொலித்தனர்.
ராகுல் காந்திக்கு (54) விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் சோலாப்பூர் எம்.பி பிரணிதி ஷிண்டேவை (44) ராகுல் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இத்தகவலை, அவரது குடும்பத்தினரோ, காங்கிரஸ் கட்சியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திறமையாக பணியாற்றிய அவர், அரசியல் கட்சி வேறுபாடு கடந்து அனைவருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். யெச்சூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் எனவும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, INDIA கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் சீதாராம் யெச்சூரி. 1996, 2004, 2009 காலகட்டங்களில் மத்தியில் கூட்டாட்சி மலர வித்திட்டவர். இக்காலக்கட்டங்களில் கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவர காரணமானவர். இந்த செயல்திட்டத்தின் விளைவாகவே, கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
Sorry, no posts matched your criteria.