News September 13, 2024

காயத்ரி மந்திரம் ஆண்கள் சொல்லலாமா?

image

மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம் என்று கூறப்படுகிறது. இதை ஆண்கள் சொல்லலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த மந்திரமே ஆண்களுக்கானது என்று காஞ்சி மஹா பெரியவர் தெரிவித்துள்ளார். அதை ஆண்கள் சொன்னால் அவர்கள் குடும்ப பெண்களுக்கும் அது கவசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்த நாளிலேயே சித்த சுத்தி உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

News September 13, 2024

உடம்பில் உள்ள மருக்கள் மறைய சூப்பர் டிப்ஸ்!

image

பலருக்கு கழுத்தை சுற்றிலும், அக்குள் பகுதியிலும் மருக்கள் காணப்படும். கிருமியால் ஏற்படும் இந்த மருவை கிள்ளி விட்டால், பல இடங்களில் பரவி விடும். சிறிது சுண்ணாம்பு எடுத்து, அதன் மீது நீரை விட்டு குலைக்க வேண்டும். பிறகு, வெற்றிலை காம்பை எடுத்து அதன் முனையை கையால் நசுக்கி, அதை அந்த சுண்ணாம்பில் தொட்டு மருக்கள் மீது வைக்க வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் மறைந்து விடும்.

News September 13, 2024

இன்று இடி-மின்னலுடன் மழை: RMC

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். SHARE IT

News September 13, 2024

விஸ்வகர்மா திட்டத்தை முடக்குவது ஏன்?

image

கோவையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “விஸ்வகர்மா மிகச் சிறப்பான திட்டம். இதில் எந்த சாதியும் இல்லை. மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காக இத்திட்டத்தை தமிழக அரசு முடக்குகிறது” என்றார். காலணி செய்தல், முடித்திருத்துதல் உள்ளிட்ட கைத்தொழில்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே விஸ்வகர்மா திட்டம். ஆனால், குலக்கல்வியை புகுத்துவதாக கூறி இதனை தமிழக அரசு அமல்படுத்த மறுக்கிறது.

News September 13, 2024

TNPSC குரூப் 2 தேர்வு எழுதுவோருக்கு சில டிப்ஸ்!

image

குரூப் 2 தேர்வுக்கு காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வறைக்கு செல்ல வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 8.15 மணிக்கெல்லாம் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஹால்டிக்கெட் மறக்க வேண்டாம். காலையில் அவசர அவசரமாக படிக்க வேண்டாம். மனதை ரிலாக்சாக்க பாடல்களை கேளுங்கள். தேர்வுக்கு முன்பு தயிர் – சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இது மூளையையும் சுறுசுறுப்பாக்கும். உடலுக்கும் தெம்பு கொடுக்கும்.

News September 13, 2024

கூல்டிரிங்ஸ் குடிக்கிறீங்களா.. இதை படிங்க முதல்ல!

image

வெறும் 475 மி.லி. கூல்டிரிங்ஸில் 51 கிராமுக்கு மேல் Added Sugar உள்ளது. இது மிக அதிக சர்க்கரை அளவாகும். மேலும், அதிகப்படியான நிறச் சாயங்களும், பாஸ்பேட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே கூல்டிரிங்ஸை தொடர்ந்து குடித்து வருபவருக்கு சர்க்கரை நோய் நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் உடல் பருமன், குடல் பிரச்சினை, பல் எனாமல் அரிப்பு, கிட்னி பாதிப்பு ஆகியவை கொசுறாக வந்து சேருமாம்.

News September 13, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 13, 2024

பிரபல டாக்டர் மீது பகீர் புகார்..!

image

தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் கூறினர். இந்நிலையில், பிரபல மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ், சில நடிகைகளை குறிப்பிட்டு அவர்களின் அந்தரங்கம் பற்றி தரக்குறைவாக யூடியூப் சேனல்களில் பேசினார். இதையடுத்து, அவர் மீது நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

News September 13, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அழுக்காறாமை ▶குறள் எண்: 161 ▶குறள்: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு. ▶பொருள்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

News September 13, 2024

கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாதா?

image

கழுதைக்கு கற்பூர வாசனை மட்டுமல்ல, மற்ற எல்லா வாசனைகளையும் நுகர முடியும். பிறகு, எதற்கு கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிற பழமொழி? கழு என்ற ஒரு வகை புல் இருக்கிறது. இந்த புல்லை கொண்டு பாய் தைக்கும் போது, கற்பூர வாசனை நன்றாக வரும். இதை தான், “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். காலப்போக்கில் இது மருவி, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என ஆயிற்று.

error: Content is protected !!