India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார விடுமுறை, மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 995 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 190 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இன்ஸ்டா, FB, X, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மொத்தமாக 100 கோடி Followerகளை கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிகபட்சமாக இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி Followerகளை கொண்டுள்ளார். வீதிகளில் இருந்து உலகின் மிகப் பெரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
USA பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், “Goodbye, USA!” என தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 17 நாள் பயணமாக கடந்த 27ஆம் தேதி USA சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ₹7,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அங்குள்ள தமிழர்களை சந்தித்து சிறப்புரையாற்றினார். USA பயணத்தை நிறைவு செய்த அவர், நாளை காலை சென்னை திரும்பவுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். இதில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் தற்போது ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
2,327 காலியிடங்களுக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. சார்-பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வர்கள் 1 மணி நேரம் முன்னரே வர வேண்டும், ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை முக்கிய நகரங்களில் இயக்க ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் 16ம் தேதி முதல் குஜராத் மாநிலம் புஜ் – அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இது முழுவதும் AC வசதி கொண்டது. முதலில் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. SHARE IT
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒதுக்கீடு நிறைவடைந்தது. இந்நிறுவனம் ₹6,560 கோடிக்கு <<14064860>>IPO<<>> வெளியிட்ட நிலையில், சுமார் ₹3 லட்சம் கோடி அளவிலான விண்ணப்பங்கள் குவிந்தன. இது வரலாற்றின் மிகப்பெரிய IPO என்ற பெருமையைப் பெற்றது. இதனிடையே, பங்கு ஒதுக்கீடு நிறைவடைந்த நிலையில், Refund நடைமுறை தொடங்கியுள்ளது. IPO விலையை விட டபுள் விலையில் இதன் பங்குகள் பட்டியலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தனது வேறுபட்ட நடிப்பால் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் நவரச நாயகன் கார்த்திக். காதல், கோபம், நகைச்சுவை, சோகம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்த தமிழ் சினிமாவின் அமரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
தமிழக பாஜகவில் 10 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் 1 கோடி பேரை சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வணிகர் சங்கம் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.