India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி எச்சரித்துள்ளார். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை, அணியுமாம் தன்னை வியந்து” என திருக்குறளை தனது X பக்கத்தில் பதிவிட்டு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக அவர் இந்த கருத்தை பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாருதி சுசூகி நிறுவனம் CNG ஸ்விஃப்ட் வேரியண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்களில் ஏற்கெனவே அக்கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், CNG காரை தற்போது மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹8.20 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ CNGக்கு 32.85 கிலோ மீட்டர் தூர மைலேஜ் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்காெடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 6 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் இபிஎஸ் சாடியுள்ளார்.
வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ₹3,500 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹91.50க்கும், 1 கிலோ வெள்ளி ₹91,500க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3.50 உயர்ந்து ₹95ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்ந்து ₹95,000க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ம் தேதிக்கான அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் 5 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தாெடங்கியது. இதையடுத்து ஆன்லைன் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலம் பயணிகள் வேகமாக முன்பதிவு செய்யத் தொடங்கினர். இதனால் உடனடியாக அனைத்து டிக்கெட்டுகளின் முன்பதிவும் முடிந்து விட்டது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளை நடக்கிறது.
1) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? 2) உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? 3) குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 4.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது? 5) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது? 6) இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சீமான் தலைமையை ஏற்கும் கட்சியுடனேயே கூட்டணி என்று நாதக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம், தவெக கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், சீமானும் விஜய்யும் சந்தித்து அரசியல் பேசியது உண்மைதான். ஆனால் கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை என்று கூறினார். விஜய் கட்சியோடு கூட்டணி என்று ஒருபோதும் சீமான் அறிவித்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹960 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ₹6,705க்கும், 1 சவரன் தங்கம் ₹ 53,640க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ₹960 உயர்ந்து ₹54,600க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் தங்கம் விலையும் ₹120 அதிகரித்து இன்று ₹6,825க்கு விற்கப்படுகிறது. SHARE IT
சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அதானி குழுமம் மறுத்துள்ளது. பணமோசடி வழக்கில் அதானி குழுமத்தின் $310 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி மறுப்பதாக தெரிவித்துள்ள அக்குழுமம், தங்கள் நிறுவன கணக்குகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விளக்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.