India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை- மதுரை டிக்கெட் கட்டணம் ₹1,900 – ₹4,000, சென்னை – நெல்லை கட்டணம் ₹2,000 – ₹4,000 வரை உயர்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT
தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI மாணவர் சேர்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி மாணவ சேர்க்கையை நீட்டிப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. மாதம் ₹750 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 94990 55689 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார். அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார், மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். குடிபோதையில் சிறுவர் உள்பட இருவரை மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, செல்போன் சிக்னலை கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இனிப்பு, காரம் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என FSSAI உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில, யூனியன் அரசின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரவிருக்கும் பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு சிறப்பு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, உணவகங்கள், உணவக கூடங்கள் மற்றும் பேக்கரிக்களில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
<<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> SC ஜாமின் வழங்கியிருப்பதை உண்மைக்கு கிடைத்த வெற்றி என AAP கூறியுள்ளது. AAP மூத்தத் தலைவர் மணிஷ் சிசோடியா கூறுகையில், கெஜ்ரிவால் போல வேறு எந்த அரசியல்வாதியும் உண்மையானவர்கள் இல்லை, தேசப்பற்றாளர் இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருப்பதாக கூறினார். ஜாமின் அளித்ததற்காக SC, அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு சல்யூட் அடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
SC ஜாமினையடுத்து 174 நாள்களுக்கு பிறகு <<14090205>>கெஜ்ரிவால்<<>> சிறையில் இருந்து விடுதலையாகிறார். மதுபானக் கொள்கை வழக்கில் மார்ச் 21இல் ED அவரை கைது செய்தது. இந்த வழக்கில் ஜூலை 12இல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இதே வழக்கில் அவர் சிபிஐயினரால் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் இருந்தார். தற்போது SC இந்த வழக்கில் ஜாமின் வழங்கியுள்ளாதால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், செப். 17ஆம் தேதிக்கான அனைத்து Appointmentகளையும் செப். 16க்கு மாற்றியுள்ளது. இது குறித்த அரசின் செய்தி குறிப்பில், மிலாடி நபி செப். 17ஆம் தேதி கொண்டாட உள்ளதாகவும், இதனால், அன்றைய தினத்திற்கான பாஸ்போர்ட் Appointmentகளை முன்கூட்டியே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான SMS விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் <<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> ஜாமின் அளித்த SC, பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. வழக்குத் தொடர்பாக கருத்துகளை வெளியிடக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் SC உத்தரவிட்டுள்ளது. CBI உரிய நடைமுறையை பின்பற்றி இருப்பதாகவும், அதே நேரத்தில் நீண்டகால சிறைவாசம் என்பது சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் SC தெரிவித்துள்ளது.
டெல்லி CM கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ED வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் ஜாமின் அளித்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் விடுதலையாவது உறுதியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.