India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பி.எட். படிப்புகளுக்கு செப். 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ITI அட்மிஷனுக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, இருமொழி கொள்கை அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தி வருவதாகவும், NEPஇல் உள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பே தாங்கள் அவற்றை நடைமுறைபடுத்தி விட்டதாகவும் கூறினார்.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள் என்பது தற்போது கண்கூடாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நேற்று அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் தனிப்பட்ட முறையில் உரையாடிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் செயலுக்காக சீனிவாசனிடம் வருத்தம் கேட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தானாக முன்வந்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை பொதுவெளியில் கூறலாமா என நிதியமைச்சர் ஹோட்டல் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை, யார் எடுத்தார்கள் என்று தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வணங்கான் படத் தலைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கிய அந்தப் படத்தில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் தொடுத்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த ஐகோர்ட், பாலா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு தேவையற்ற அழைப்புகள் (Spam calls) வருவது அதிகரித்து வருகிறது. விளம்பரம், மோசடி நோக்கங்களுடன் அடிக்கடி வரும் ஸ்பேம் கால்களை தடுக்க ஆன்ராய்டு போனில் டு நாட் டிஸ்டர்ப் (DND) ஆப்சனை பயன்படுத்துகின்றனர். இதனால் டெலிவரி பாட்னர்களின் அழைப்பையும் தவற நேரிடும் என்பதால், தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவில் (NCPR) உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வைத்தால் டெலிமார்கெட்டிங் ஸ்பேம் காலை தடுக்கலாம்.
தாலிக்கு தங்கத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சென்னை HC கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த HC, 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எத்தனை பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்டவை குறித்து கேள்வியெழுப்பியது. பின்னர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு ஆணையிட்டது.
இங்கிலாந்தில் காவல்துறை அமைச்சரின் Bag திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருடாந்திர போலீஸ் மாநாட்டில் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் பங்கேற்று, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவரது பை திருடப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் பிணையில் விடுவித்தனர்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், அவரது மனைவி சுனிதா கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், “ஆம் ஆத்மி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள், உறுதியுடன் இருப்போம். விரைவில் மற்ற தலைவர்களும் விடுதலையாவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். கலால் முறைகேடு வழக்கில் கைதான அவருக்கு, SC இன்று ஜாமின் வழங்கியதையடுத்து விரைவில் விடுதலையாகிறார்.
Sorry, no posts matched your criteria.