India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய சாலைக்காக நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். தமிழக நலனுக்காக அதிகளவில் பணம் அனுப்ப மத்திய அரசு ரெடி எனக் கூறியுள்ள அவர், USAவில் உள்ள தரத்திற்கு நிகராக சாலை கட்டுமானத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக ₹4,730 கோடி மதிப்பில் உருவாகி வரும், தஞ்சை-விக்கிரவாண்டி 4 வழிச்சாலையை ஆய்வு செய்தார்.
அந்தமான் – நிகோபர் UT தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீ விஜயபுரம் எனும் பெயர் சுதந்திர போராட்டத்தின் வெற்றியை குறிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அத்துடன், காலனித்துவ முத்திரையில் இருந்து தேசத்தை விடுவிக்கும் PM மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவிருந்த AFG Vs NZ இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பந்து வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. உ.பி. நொய்டாவில் போட்டி நடக்கவிருந்த நிலையில், அங்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 5 நாள் ஆட்டமும் பாதித்ததால், போட்டி கைவிடப்பட்டது. இந்தியாவில் கடந்த 91 ஆண்டுகளில் (1933 முதல்) நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.
விராட் கோலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக அளவில் நம்மை பெருமைப்படுத்தியவருடன் ஒரே விமானத்தில் பயணித்தபோது எடுத்த புகைப்படம் என அவர் பதிவிட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியினர் நேற்று சென்னை வந்தடைந்தனர். கான்பூரில் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்திற்கு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, இது பாசிசத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் Ex மினிஸ்டர் ஜெயக்குமாரின் பதிவில், அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது, தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜக-வை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு X மற்றும் இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. அவரது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற அல்லது விசித்திரமான பதிவுகளை புறக்கணிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்புவின் X கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு, ADMK மற்றும் விஜய் கட்சிக்கு பகிரங்கமாக VCK அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பு குறித்து ADMK தலைமை முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் ADMK தலைமையிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. அக்கட்சி தலைமை மௌனம் காக்கிறது. அதே நேரத்தில், மாநாட்டிற்கு வருவது குறித்து புஸ்ஸி ஆனந்துடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிக்குமாரின் நந்தன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் H.வினோத் கலந்து கொண்டார். அப்போது நந்தன் படம் குறித்து பேசிய அவர், “பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை, எந்த படம் மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில் நந்தன் ஒரு சிறந்த படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அதிகாரத்தை பயன்படுத்தி விதிகளை மீறி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு SEBI தலைவர் மாதபி பூரி, அவரது கணவர் தாவல் புச் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவதூறு பரப்பும் நோக்கில் முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். SEBI தலைவராக பொறுப்பேற்ற பின், இவர்களது அகோரா ஆலோசனை நிறுவனம் ₹2.95 கோடி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
அன்னபூர்ணா உணவக உரிமையாளரிடம் நடந்து கொண்ட விதம் நிதி அமைச்சர், பாஜகவின் அதிகார ஆணவத்தை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி தீவிரவாதமும், மோடியின் பணக்கார நண்பர்களுக்கு வரிச்சலுகையும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.