India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
6 மாதத்திற்கும் மேல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் படவாய்ப்பு இல்லாமல் அருண் விஜய் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை நடிகர் தனுஷ் அணுகி, தான் இயக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதாக கூறப்படுகிறது. ராயன் படத்தின் வெற்றியால் தனுஷின் மார்க்கெட் எகிறிப்போய் இருப்பதை அருண் விஜய் பார்த்துள்ளார். இதையடுத்து கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
வெள்ளை சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலக்கும். நாட்டு சர்க்கரை மெதுவாக கலக்கும். அவ்வளவுதான். ஆனால், நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் ஏறாது என்ற தவறான புரிதல் சர்க்கரை நோயாளிகளிடம் உள்ளது. அதனால் காபி, டீயில் 2, 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்கின்றனர். இது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
▶50/30/20 விதியைப் பயன்படுத்தி பட்ஜெட் போடுங்கள். 50% தேவைகளுக்கு, 30% விருப்பங்களுக்கு, 20% சேமிப்புக்கு. ▶செலவை அறிய, வாரந்தோறும் பட்ஜெட்டை சரிபார்க்க வேண்டும். ▶அத்தியாவசியம் இல்லாதவற்றுக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ▶பொருட்களை வாங்குவதற்கு அவசர நிதியை பயன்படுத்த வேண்டாம். ▶ஒவ்வொரு மாதமும் முழுமையாகச் செலுத்தக்கூடிய தொகைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்தவும்.
வேட்டையன் பாடல் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஜினிகாந்தே காரணம் என்றும், அவர் கேட்டதாலேயே ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. விஜய் கட்சி மாநாட்டிற்கு பிறகு பாடல் ரிலீசை வைக்கலாம் என கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டில் விஜய் ஏதேனும் தன்னை மறைமுகமாக விமர்சித்தால் பதிலடி கொடுக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார். தோடாவில் நடக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 1982க்கு பிறகு தோடா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் BJP 43 இடங்களில் போட்டியிடுகிறது. 370 சட்டப்பிரிவு ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில், செப்.18இல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியானதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, திருமாவளவனே அதுகுறித்து விளக்கமளித்து விட்டார் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தாம் 19 நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்ததாக கூறினார். இந்த முதலீடு மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்.14-ம் தேதி தேசிய இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, இந்தி அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 1918 முதல் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் 1949-ம் ஆண்டு செப்.14-ல் இந்தியை அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜக எதிர்ப்பை கடைபிடிக்கும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவசியமில்லை, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளிவந்து ஓராண்டுதான் ஆகிறது என்று அவர் பதிலளித்தார். திராவிட கட்சிகள் வளரலாம், மதவாத சக்திகள் வளரக் கூடாது என்றும் கூறினார்.
தனக்கு முடி வெட்டிய சவர தொழிலாளிக்கு ராகுல் காந்தி பரிசு அனுப்பியுள்ளார். கடந்த மே 13 ஆம் தேதி UP-யில் பரப்புரை செய்த அவர், பிரிஜேந்திர நகரில் உள்ள சலூனில் முடி திருத்தம் செய்தார். இது நடந்து 4 மாதம் ஆன நிலையில், தனக்கு முடி திருத்தம் செய்தவருக்கு 2 நாற்காலி, மேஜை, இன்வெர்ட்டரை பரிசாக அனுப்பியுள்ளார். ராகுலின் பரிசு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சலூன் கடைக்காரர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.