India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில மொபைல் நிறுவனங்கள், சந்தை போட்டி விதிகளை மீறியது இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (CCI) அறிக்கையில் தெரியவந்துள்ளது. சாம்சங், சியோமி, ஒன்பிளஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அமேசான், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து சில மொபைல் மாடல்களை பிரத்யேகமாக வெளியிடுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தை போட்டிக்கு எதிரானது மட்டுமல்லாமல், நுகர்வோர் நலனுக்கும் எதிரானது என CCI அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ₹5,000 அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் தாயகம் திரும்பிய மீனவர்கள் தங்களுக்கு இலங்கை அரசு மொட்டை அடித்து அனுப்பியதாக குற்றம் சாட்டியதையடுத்து, தங்கச்சி மடம் பகுதி மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த Ex முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக (1924-2024) மத்திய அரசு ₹100 நாணயம் வெளியிட்டது. இந்த நாணயம் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் <
திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது என்றும், கூட்டணி தொடரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன், மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால், அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது என்றும் ஆதங்கப்பட்டார்.
சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வருகிற 27ஆம் தேதி Simply South ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் பல ஓடிடி தளங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. மண் சார்ந்த கதையை நேர்த்தியாக படமாக்கிய இயக்குநர் எஸ்.வினோத்ராஜை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
அவசர தேவை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் Second Hand பொருட்களை வாங்குவார்கள். எந்த காரணமாக இருந்தாலும் சரி, ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை Second Hand ஆக வாங்கவே கூடாது என டெக்கிஸ் அறிவுறுத்துகிறார்கள். கேமரா, ஸ்மார்ட் அசிஸ்டென்ட் தயாரிப்புகள் PreHack செய்ய வாய்ப்புள்ளதால் இவற்றை Reset செய்வது போதுமானதாக இருக்காது. இது அந்நியர்களுக்கு சாதகமான அணுகலை வழங்கி, உங்களின் Privacyக்கு அச்சுறுத்தலை அளிக்கலாம்.
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் தொடர்பாக அவர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே, அன்னபூர்ணா குழும தலைவர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினர். யெச்சூரி மறைவுக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேற்கு சீனாவின் குலியா பனிப்பாறையில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஓஹியோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 3 பெரும் காலநிலை மாற்றங்களில் இருந்து தப்பிய 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய அவற்றின் DNAவை மெட்டஜெனோமிக் பகுப்பாய்வு செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதல் காரணமாக பனி உருகுவது வேகமெடுத்தால் நோய்க்கிருமிகளின் பரவல் அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
மூளை, இனப்பெருக்க உறுப்பு உள்ளிட்ட முக்கியமான மனித உறுப்புகளில் NanoPlastics (0.5%) குவிந்து வருவதாக நியூ மெக்ஸிகோ பல்கலை., ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் உள்ள பாலிஎதிலீன் துகள்கள் அதிகளவு மனித உணர்திறன் திசுக்களில் குவிந்து கிடக்கின்றன. அதன் தீய விளைவுகளை உலகளாவிய அவசரநிலையாக கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.