India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். குக்காக இருக்கும் மற்றொரு தொகுப்பாளர், தன்னுடைய பணியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பணம், புகழை விட சுயமரியாதையே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் யாரை மறைமுகமாக தாக்குகிறார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவம் காங்கிரஸ் என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸைவிட நேர்மையில்லாத, வஞ்சகமான கட்சி வேறு எதுவும் கிடையாது என குற்றஞ்சாட்டிய அவர், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே அந்தக் கட்சியின் நோக்கம் என்றார். மேலும், புதுப்புது பொய்களை சொல்வதற்காக, காங்கிரஸ் கட்சி ஒருநாளும் வெட்கப்பட்டது இல்லை எனவும் அவர் கடுமையாக சாடினார்.
மகளுக்கு ‘இந்தியா’ கோவாவில் வாழும் தன்னை ஃபீல்டிங் பயிற்சியாளராக BCCI வேண்டாம் என சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். BCCI சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை, ஆனால் நான் உள்ளூர்காரர்தான், ஒருவேளை கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேறு ஒரு மெட்ரோ நகருக்கு குடிபெயர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை ராஜ்பவனில் ‘ஸ்ரீராமா இன் தமிழகம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என கூறினார். மக்கள் மனங்களில் இருந்து ராமரை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும் தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என்றும், சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கூலி’. இதன் படப்பிடிப்பு விஜயவாடா அருகே நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு அருகே கண்டெய்னர் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் படக்குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட தருணம் பற்றி மோர்னே மோர்கல் பகிர்ந்துள்ளார். BCCI-யிடம் ஃபோனில் இந்த செய்தியை கேட்டபோது, தனியாக 5 முதல் 7 நிமிடங்கள் அமர்ந்து அந்த தருணத்தை ரசித்ததாக கூறியுள்ளார். இதை முதலில் மனைவியிடம் சொல்லாமல், அப்பாவிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகனாக இருந்துவரும் தனக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.
GST குறித்து பேசியது தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் கேட்டுக்கொண்டது. GST கூட்டத்தில் தங்கள் உரிமையாளா் கேள்வியெழுப்பிய VIDEO வைரலானதால், தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவர் அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் TN பாஜக மன்னிப்பு கேட்டதாகவும், வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
காமெடி நடிகர் கருணாகரனின் தந்தையும், மத்திய அரசின் உளவுத்துறை ஓய்வுபெற்ற அதிகாரியுமான காளிதாஸ் (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் என கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் நேரில் அழைத்தால், அதில் பங்கேற்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. விசிக அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ குறித்த கேள்விக்கு, அக்கட்சியுடன் கூட்டணி அமைந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு தராது என்றார்.
SEBI தலைவர் மாதபி புரி புச் சீன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக காங்கிரஸ் புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விதிகளை மீறி முறைகேடாக வருமானம் ஈட்டியதாக முன்பு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பிரதமருக்கு தெரியுமா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.