India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாமில் நாளை அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. அதனால், தேர்வு நடைபெறும் காலை 10.30 மணி – 1.30 மணி வரை தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 1.10 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வில், ஆன்லைன் முறைகேட்டை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தேர்வை நடத்திட வேண்டி, நன்கு ஆலோசிக்கப்பட்ட பின் எடுத்த முடிவு இது என அரசு தெரிவித்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில், இந்தியா-தென் கொரியா அணிகள் மோதவுள்ளன. சீனா ஹுலுன்பியுரில் நடைபெற்று வரும் 8ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில், இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்றன. ஜப்பான், மலேசியா லீக் சுற்றுடன் வெளியேறின. இதையடுத்து செப்.16இல் நடைபெறும் SEMIயில், IND-SK மோதவுள்ளன. மற்றொரு போட்டியில் சீனா-பாகிஸ்தான் மோதுகின்றன. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் ஒரு காவலரை CBI போலீசார் கைது செய்துள்ளனர். கொலை விவகாரம் பூதாகரமாக பின் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஊழல் வழக்கில் CBI அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அவரை கைது செய்துள்ளனர்.
நடிகை மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு தம்பதியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. இதில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக வலம் வரும் மேகா ஆகாஷூக்கு, கடந்த மாதம் அவரது காதலனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் சாய் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ஆவார். நாளை இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயிலை PM மோடி நாளை மறுநாள் குஜராத்தில் தொடங்கிவைக்கிறார். அகமதாபாத் – புஜ் இடையே இயக்கப்படும் இந்த ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் என்றும், ரயில் புறப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக பயணிகள் கவுண்ட்டரில் டிக்கெட்டை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு தின விழா, பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழாவையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டிகளை ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். 6-12ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை நாளைக்குள் (செப்.15) ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். வெற்றியாளர்களுக்கு 2025 குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ₹32 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அணு ஆயுதங்களின் திறன் குறித்து, 1939ஆம் ஆண்டு USA அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெட்டிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதம் அமெரிக்க அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில், மனித உயிர்கள் பறிபோக அணு ஆயுதம் காரணமாக இருந்ததை அறிந்து அவர் வேதனை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றங்களில் இருந்து இமயமலையை காக்க, லே முதல் டெல்லி வரை சோனம் வாங்சுக் என்பவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஹிமாச்சலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளார். ‘நண்பன்’ படத்தின் ஒரிஜினல் ‘3 Idiots’-ல் வரும் அமீர்கானின், கதாபாத்திரம் இவரது Inspiration-ல் தான் உருவானது.
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓணம், மிலாது நபியை ஒட்டி நேற்று முதல் பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து செல்கின்றன. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதிகளிலும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சிலரது முகம் எப்போதுமே எண்ணெய் வடிந்தது போல காட்சியளிக்கும். இதற்கு தீர்வு இதோ.
*வெள்ளரிக்காயை பிசுபிசுப்பாக அரைத்து இரவு முகத்தில் தடவி காலையில் கழுவவும்.
*தக்காளிச் சாற்றை 15-30 நிமிடம் முகத்தில் ஊற வைத்த பிறகு, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
*முட்டை வெள்ளைக் கருவை மட்டும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.
*கற்றாழையை வாரம் இருமுறை அரைத்து தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
Sorry, no posts matched your criteria.