India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இவ்வுலகில் 8.2 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2022-ம் ஆண்டு வரை சுமார் 700 மில்லியன் மக்கள் பசியில் வாடியதாக தரவுகள் சொல்கிறது. ஆனால், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 2040-க்குள் இதன் எண்ணிக்கை 1.1 பில்லியனாக உயரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, பிளாஸ்டிக் பயன்பாடும், அதன் கழிவுகளும் மண்ணை நாசம் செய்வதே காரணம் எனவும், அது அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர், CM ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர். கவின் படுகொலை செய்யப்பட்டபோது CM இரங்கல் தெரிவிக்காததும், தூத்துக்குடிக்கு சென்றபோது நேரில் செல்லாமல் போன் மூலம் ஆறுதல் கூறியதும் சர்ச்சையானது. இந்நிலையில், முதல்வரை சந்தித்த கவின் பெற்றோர், தனது மகனின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த Dream 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட்டதாக BCCI தெரிவித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது. எனவே, புதிய ஸ்பான்சரை தேடும் முயற்சியில் BCCI இறங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணங்களுக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் என்றார். சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
லால் சலாம், வேட்டையன், கூலி ஆகிய படங்களுக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால், அடுத்த படத்தின் கதை தேர்வில் ரஜினி தீவிர கவனம் செலுத்துகிறாராம். இந்நிலையில் மகாநதி (நடிகையர் திலகம்), கல்கி 2898 ஆகிய படங்களின் இயக்குநர் நாக் அஷ்வின், ரஜினியிடம் கதை சொல்லியுள்ளாராம். இது அவருக்கு பிடித்துபோக, கதையை டெவலப் செய்ய சொல்லியுள்ளாராம். எனவே ரஜினியின் அடுத்த படத்தை நாக் அஷ்வின் இயக்குவார் என கூறப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் மிக முக்கியமானது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய அறிவியல் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதுடன், மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி, மற்றும் உடலின் தசைகள் வலுப்பெறுகிறதாம். இத்துடன், செரிமானம் சீராவதுடன், தூக்கமின்மையும் சரியாகிறது. தினமும் 15 – 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும்
✪<<17509267>>திமுகவில் <<>>இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்
✪சிங்கம் <<17508888>>தூங்கக்கூடாது<<>>.. விஜய்யை சாடிய சரத்குமார்
✪நாடாளுமன்றத்தை <<17508838>>முடக்குவது <<>>நல்லதல்ல.. மத்திய அமைச்சர் அமித்ஷா
✪தங்கம் விலை <<17509891>>சவரனுக்கு <<>>₹80 குறைந்தது
✪SA 20 லீக் தொடர்: <<17508836>>பிரிட்டோரியா <<>>கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான கங்குலி ✪KGF புகழ் <<17509653>>தினேஷ் <<>>மங்களூரு காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
சாதாரண Chewing Gum-ஆல் உயிருக்கே ஆபத்து வரலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? 1 கிராம் chewing gum-ல் சுமார் 100-600 மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதாக Journal of national medicine-ன் ஆய்வுகள் கூறியுள்ளது. இது, நுரையீரல், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துமாம். ஏற்கெனவே, 1 ஆண்டுக்கு சராசரியாக 39,000-52,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஒரு மனிதனின் உடலுக்குள் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.
‘லப்பர் பந்து’ படம் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்வாசிகா. இவர் ‘பெத்தி’ என்ற தெலுங்கு படத்தில் ராம் சரணின் அம்மாவாக நடிப்பதற்கு மறுத்துவிட்டார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ராம் சரணுக்கு அம்மாவாக நடிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை, அதற்கான நேரம் வரும்போது நடிப்பேன் என்றார். ராம் சரணுக்கு 40 வயது ஆகும் நிலையில், ஸ்வாசிகாவுக்கு 34 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.