India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐம்பெரும் அம்பலங்களில் பொன்னம்பலமான தில்லை நடராசரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஆனந்த தாண்டவத்தை கண்ணால் கண்டு பதஞ்சலி முனிவர் முக்திப் பெற்ற ஆகாயத் திருத்தலமான இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, தேவாரம் பாடி, தீபாராதனையில் பங்கேற்று வணங்கினால் கல்விச் செல்வமும், கலை ஆற்றலும் கிட்டும் என்பது ஐதிகம்.
மதுரையில் விசிக கொடி அகற்றப்பட்ட விவகாரத்தில், விசிகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசிய போது, கொடியை கூட ஏற்ற முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். விசிக வீடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, இந்த பதிவு மூலம் திமுக மீது திருமாவளவன் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளதாக சாடினார். 2 கட்சிகளும் கூட்டணி அமைக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
பாலியல் புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று நடிகைகளை நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகைகளை போனில் தொடர்பு கொண்டு சிலர் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல், பாதிக்கப்பட்ட நடிகைகளை சமாதானம் செய்யவே நட்சத்திர கலைவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் அமைதி காப்பார்களா? கமெண்ட் பண்ணுங்க
SBI வங்கியில் காலியாக உள்ள 1511 இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. துணை மேலாளர், உதவி மேலாளர் நிலையிலான பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு நேற்று முதல் SBI இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் முதல் ஓராண்டு காலம் பயிற்சி அடிப்படையில் நியமிக்கப்படுவர். விண்ணப்பிக்க அக். 4 கடைசி. SHARE IT
சமீப காலமாக வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் உள்ள லக்னோவில் 9 வயது சிறுமி மாரடைப்பால் பலியான சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மக்கள் அதிகமாகக் கூடும் விழாக்களில் வாழைமரம், மாவிலைத் தோரணம் ஏன் கட்டுகிறார்கள் தெரியுமா?. அதிக மக்கள் கூடும் இடங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடியால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. காற்றை தூய்மைப்படுத்தவும், காற்றில் ஆக்சிஜன் தரத்தை உயர்த்தவும் வாழை மரமும், மாவிலையும் உதவும். எனவே தான் விழா காலத்தில் வாழை மரமும், மாவிலையும் கட்டப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது. சென்னையின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
வாகன இறக்குமதி மீதான தடையை இலங்கை அமைச்சரவை நீக்கியுள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடியின்போது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் கட்டுப்பாடுகளை நீக்கி அதிபர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக அக். 1ஆம் தேதி பொது போக்குவரத்து வாகனங்களுக்கான தடை நீக்கப்படுகிறது.
எந்த சலுகையும் தனது ஆசையை தூண்டாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தான் ஒரு உறுதியான சித்தாந்தத்தால் வழி நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டு பேசினார். மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பிரதமர் வாய்ப்பு அளிப்பதாக ஆசை காட்டியதாகவும், தான் அதை நிராகரித்ததாகவும் கூறினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், வெற்றி பெற்ற நடிகையாக வலம் வருகிறார். மேலும், 5 மொழி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். அம்மன் வேடத்திற்கு பொருத்தமான நடிகை என ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர், ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கே சவால் விட்டவர். இன்று 54ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு வாழ்த்துகள்.
Sorry, no posts matched your criteria.