News September 15, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இலங்கை: 2025 பிப்ரவரியில் தனியார் பயன்பாட்டிற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இலங்கை அரசு முடிவு. ➤காங்கோ: ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு காங்கோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ➤ஈரான்: ISRC ஏவிய சம்ரான்-1 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ➤பாக்: தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கனுக்கான பாக். தூதரை திரும்ப அழைத்து அந்நாடு உத்தரவிட்டது.

News September 15, 2024

படகு கவிழ்ந்து 64 பேர் பலி

image

நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 64 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ஃபாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு விபத்தில் சிக்கியது. இதில் 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி விவசாயிகள் விவசாய பணிக்காக தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றைக் கடக்க 2 படகுகள் மட்டுமே உள்ளதால், சில நேரங்களில் கூட்ட நெரிசல் காரணமாக விபத்து ஏற்படுகிறது.

News September 15, 2024

விஜய் ஒரு சினிமா சொப்பனம்: பாஜக

image

விஜய் சிம்ம சொப்பனம் அல்ல, சினிமா சொப்பனம் என்று பாஜக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசியபோது, MGR தவிர வேற சினிமா பிரபலங்கள் அரசியலில் ஜெயிக்கவில்லை என்று கூறினார். சிவாஜி, விஜயகாந்த், கார்த்திக் அரசியலில் தோல்வி அடைந்தனர். அதில் விஜய்யும் விதி விலக்கு அல்ல என்றும் தெரிவித்தார். விஜய் பற்றிய ராம ஸ்ரீனிவாசனின் விமர்சனம் குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க?

News September 15, 2024

₹2.02 லட்சம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

image

கடந்த 9 மாதங்களில் ₹2.02 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதை ஜிஎஸ்டி டைரக்டர் ஜெனரலகம் கண்டுபிடித்துள்ளது. அதன் புள்ளி விவரத்தில், 2023இல் ₹1.01 லட்சம் கோடி வரிஏய்ப்பு நடந்ததாகவும், அதை விட 2 மடங்கு அதிக வரி ஏய்ப்பு 2024இல் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பில் ₹82,000 கோடி அளவில் 78 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

News September 15, 2024

விளையாட்டு துளிகள்

image

*ஜெர்மனியில் நடைபெற்ற 13ஆவது ஐரோப்பிய டிராம் சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் (3,850) கோப்பையை வென்றது. *டைமண்ட் லீக்கில் ஆஸி., வீரர் மாத்யூ டென்னி 69.96 மீ., தூரம் வட்டு எறிந்து, 40 ஆண்டு லீக்கின் சாதனையை முறியடித்தார். *F4 இந்திய சாம்பியன்ஷிப்பில் பெங்களூரு ஸ்பீட்ஸ்டர்ஸ் அணி வென்றது. *வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இருந்து இந்தியாவின் துருவ் – தனிஷா ஜோடி உடல்நல குறைவு காரணமாக விலகியது.

News September 15, 2024

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட கறிக்கோழி விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அந்தவகையில், கறிக்கோழி (உயிருடன்) விலை ஒரு கிலோ ₹2 உயர்ந்து ₹107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலையில், எவ்வளவு குறைந்தாலும் சில்லறை விற்பனை விலையில் அதனை விற்பனையாளர்கள் அமல்படுத்துவதில்லை. இதனால், இன்று சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹200 முதல் ₹220 வரை விற்பனையாகிறது.

News September 15, 2024

சற்றுமுன்பு: மலையாளத்தில் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

image

ஓணம் பண்டிகையையொட்டி CM ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு எனது இதயம் நிறைந்த ஓணம் பண்டிகை வாழ்த்து எனக் கூறியுள்ளார். மிகப்பெரும் பேரிடரிலிருந்து மீண்டுவரும் கேரளாவில் வாழும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இப்பண்டிகை நம்பிக்கை மற்றும் சக்தியை தரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தில் புதிய தலைமை செயலகம்?

image

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ள இடத்தில் புதிதாக தலைமை செயலகக் கட்டிடம் கட்ட அரசு ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்திற்கு அதிகாரிகள் அண்மையில் சீல் வைத்தனர். இதை தொடர்ந்து அங்கு தற்பாேதைய தலைமை செயலகக் கட்டிடத்துக்கு பதில் புதிய கட்டிடம் கட்ட அரசு ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அங்கு கட்டலாமா? வேண்டாமா? கீழே பதிவிடுங்கள்.

News September 15, 2024

₹1,76,06,66,339 வருவாய் ஈட்டிய ரயில் எது தெரியுமா?

image

இந்திய ரயில்வேக்கு அதிக லாபம் ஈட்டி தரும் ரயில் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதிகம் லாபம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு சதாப்தி அல்லது வந்தே பாரத் ரயில் வரும். ஆனால் அதுதான் இல்லை. நிஜாமுதீன் முதல் பெங்களூரு செல்லும் பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் (NO: 22692) 2022-23 நிதியாண்டில் அதிக வருவாயை ஈட்டியுள்ளது. 5,09,510 பயணிகள் மூலம் ₹1,76,06,66,339 வருவாய் ஈட்டியுள்ளது.

News September 15, 2024

விஜயகாந்தை நினைத்து கலங்கிய பிரேமலதா

image

தேமுதிக 20ம் ஆண்டு விழாவில் விஜயகாந்தை நினைத்து பிரேமலதா கலங்கியது உருக்கத்தை ஏற்படுத்தியது. கோயம்பேட்டில் அக்கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விஜயகாந்த் சிலை, பெயர்பலகையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் இல்லாத விழாவில் கொடி ஏற்றியது வருத்தமாக இருப்பதாக கண் கலங்கினார்.

error: Content is protected !!