India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
AC பயன்பாடு அதிகமாக இருப்பதால் மின் கட்டணமும் அதிகரிக்கிறது. இதனை குறைக்க AC ரிமோட்டில் ஒரு சூட்சமம் உள்ளது. அதாவது, டெம்ப்ரேச்சரை ஒரு டிகிரி கூட்டுவதன் மூலம் 6% மின் உபயோகத்தை குறைக்க முடியுமாம். AC டெம்ப்ரேச்சரை 20°C பதிலாக, 24°C வைத்து உபயோகித்தால் 24% மின்சாரத் தேவையை குறைக்கலாம். அதே போல இரவு முழுவதும் AC ஓடுவதை தவிர்க்க ரிமோட்டில் உள்ள ‘டைமர்’ வசதியை உபயோகித்து Auto-Off செய்யலாம்.
திமுகவில் குறுநில மன்னர்கள் போல செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்க CM ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பவள விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, திமுக கட்சி நலனுக்காக சில அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை அவர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது மூத்த தலைவர்கள் பலரின் சுமையை குறைத்து, இளம் தலைமுறைக்கு பொறுப்புகளை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ₹1500க்கு விற்ற மல்லிகை இன்று ₹2500க்கு விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் ₹1100, மல்லி ₹1300க்கு விற்பனையாகிறது. அரளி பூ ₹80, செண்டுமல்லி ₹70, சாமந்தி பூ ₹120, சம்பங்கி பூ ₹80 உள்ளிட்ட பூக்கள் இன்று ₹10 – ₹20 வரை விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தாக்குதல் ட்ரோன், ஆன்லைன் மோசடியால் பிரச்னை ஏற்படும் முன்பு, தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்களுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான 2 நாள் டிஜிபிக்கள் மாநாட்டில் அவர் பேசினார். அப்போது, தீவிரவாத ஒழிப்பு பணிகளில் என்ஐஏவும், காவல்துறையும் இணைந்து செயல்படவும், 2047க்குள் வளர்ந்த, வலுவான இந்தியா என்ற மோடியின் லட்சியத்தை சாத்தியமாக்க பணியாற்றவும் கேட்டுக் கொண்டார்.
அண்ணாவின் 116ஆவது பிறந்த தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கனிமொழி எம்.பி, ஆ.ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி ஏராளமான திமுக தொண்டர்கள் அங்கு குவிந்ததால், காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
1) அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) சோகத்தை வெளிப்படுத்தும் ராகம் எது? 3) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு ரத்தம் உள்ளது? 4) சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்? 5)உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது? 6) 100% மறுசுழற்சி செய்யப்படும் பொருள் எது? 7) தூய்மையான நீரின் pH மதிப்பு எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், கையோடு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். தற்போது வரை அவர் கட்சியில் மாநாடு நடத்திய அனுபவம் கொண்ட யாரும் இல்லை. அனைவரும் அனுபவம் இல்லாத நிர்வாகிகள்தான். இதனால், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை அவர் தனி ஆளாக தாங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உங்கள் அபிப்ராயத்தை கீழே பதிவிடுங்கள்.
பாமகவை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவனுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமகவை தரக்குறைவாக பேசுவதை நிறுத்தவில்லையெனில் பாமகவுக்கும் விசிகவை தரக்குறைவாக பேசத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மது ஒழிப்பில் பிஎச்டி பட்டம் வாங்கிய கட்சி பாமக. ஆனால் விசிகவோ எல்கேஜிதான் என்றும் விமர்சித்துள்ளார்.
HC தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க தாமதமாவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்த வழக்கு SCஇல் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சில பிரச்னைக்குரிய தகவல் அரசிடம் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என்றும், விரைவில் சில தகவலை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடந்த சாப்பாட்டு போட்டியில், இட்லி தொண்டையில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார். பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுரேஷ் என்பவர் வேகமாக சாப்பிட்ட போது, இட்லி தொண்டைக்குள் சிக்கியதில் மயங்கி விழுந்து பலியானார்.
Sorry, no posts matched your criteria.