India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் இயக்கமாக இருந்த நாம், உரிமைகளை வெல்லப்போகும் அரசியல் இயக்கமாக மாறிவிட்டதாக விஜய் பெருமிதம் தெரிவித்தார். பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி தவெக அல்ல, வீறுகொண்டு எழுந்து வெற்றி காணப்போகும் கட்சி என்று கூறினார். அரசியலில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட விவேகம் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.
குறைந்தது 2 ஆண்டுகள் முன்பு வாங்கிய சொத்துகளை விற்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) கட்ட வேண்டும். அதற்கு இரு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, விற்பனை விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள லாபத்துக்கு Indexation இல்லாமல், 12.5% வரி கட்டலாம் (அ) Indexation சலுகையைக் கணக்கிட்டு 20% வரி கட்டலாம். எது உங்களுக்கு ஏதுவாக இருக்கிறது எனக் கணக்கிட்டு, ஆடிட்டரிடம் ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.
விஷக் காய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சுகாதாரத்துறை வீடு வீடாக ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்த தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவுறுத்தியுள்ளது. உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ வரும் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் ₹25,000 கோடிக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். முன்னதாக எல்ஐசி நிறுவனம் ₹21,000 கோடிக்கு ஐபிஓ வெளியிட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் இந்த ஐபிஓவில் பங்கேற்க முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.
தவெக தொண்டர்களை தோழர்களே எனக் குறிப்பிட்டு மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு, வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
தவெக மீது கேள்விகளை வீசுவதில் சிலர் அதீத விருப்பம் கொண்டுள்ளதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், “இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? இவர்களால் வென்று காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போது அவர்களுக்கு புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹56,960க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,120க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.
1) உலகின் மிகச் சிறிய சந்து எது? 2) IPO என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பௌத்த மதத்தின் புனித நூல் எது? 4) அகத்திணையும், புறத்திணையும் சேர்ந்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? 5) புலிகளின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 6) உலகின் முதல் பைக் சிட்டி எது? 7) வைரத்தின் வேதியியல் குறியீடு என்ன? 8) இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
SBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 1,497 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு அலுவலர், உதவி மேலாளர் பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: BE, B.Tech , M.Sc, M.Tech. வயது வரம்பு: 21-45. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பக் கட்டணம்: ₹755. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.