India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என உறுதியளித்தார். அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கட்சி பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மலையாள தேசத்தில் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஓணத்தை அழகாக கேரள சேலையில் பிரபல நடிகைகளும் கொண்டாடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இணையத்தில் அதிக லைக்ஸ் குவித்து இருக்கும் அவர்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% உயர்த்தி இருப்பது தெரிந்ததே. இதனால் அனைத்து வகை எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ₹20 வரை அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் மீதான நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ரீடைல் கடைகளில் பாமாயில் ₹100இல் இருந்து ₹115 ஆகவும், சன்ஃபிளவர் ஆயில் ₹115இல் இருந்து ₹140 ஆகவும், கடலை எண்ணெய் ₹155இல் இருந்து ₹165 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு நாளை (16.09.2024) சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி TVK தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர், “மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்” என்று தமிழிலும், மலையாளத்திலும் பதிவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், விஜய்யின் ஓணம் வாழ்த்தை சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
டெல்லி CMஆக ஆம் ஆத்மியை சேர்ந்த ஒருவர் விரைவில் பதவியேற்பார் என்று <<14107241>>கெஜ்ரிவால் <<>>தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நவம்பரில் தேர்தல் நடத்தும்படி வலியுறுத்துவதாக கூறினார். தேர்தல் நடக்கும் வரை ஆம் ஆத்மியை சேர்ந்த ஒருவர் CMஆக இருப்பார், 2-3 நாள்களில் எம்எல்ஏக்கள் அவரை தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆப்கனில் கிரிக்கெட்டை படிப்படியாக தடை செய்ய தலிபான்கள் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட், ஷரியா சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதாக தலிபான் தலைவர் ஹிபத்துல்லா நம்புகிறார். இதன் காரணமாக கிரிக்கெட் தடை செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி வளர்ந்து வரும் ஆப்கன் அணியினரின் தலைமேல் இடி இறக்குவது போல வெளியாகியுள்ளது.
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து அண்மையில்தான் அவர் வெளிவந்தார். இந்த சூழலில், டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், 2 நாள்களுக்குப் பிறகு பதவி விலக போவதாகவும், மக்கள் தீர்ப்பு அளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர போவதில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதற்கான சூழல் தமிழகத்தில் உருவாகாது என்றும் குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சி என்பது நிலையாக இருக்காது என்றும், மக்கள் நலனில் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகில் உள்ள 820 கோடி மக்களில் வெறும் 4.3% பேர் மட்டுமே பூரண உடல்நலத்துடன் உள்ளதாக Global Burden of Disease ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், 1990 – 2013 வரையில், 188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 95.7% பேர் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். 50% பேர் தசை தொடர்பான பிரச்னை, மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நோய்களால் அவதிப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.