India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘RL 25’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை வீரா, கில்லாடி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
பிஎஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள், CISF, உள்ளிட்டவற்றில் 39,481 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 14ம் தேதி கடைசி நாளாகும். வயது வரம்பு 18- 23 வரை ஆகும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வேலைக்கான தேர்வுகள் 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. கூடுதல் தகவலுக்கு https://ssc.gov.in/login காணலாம். SHARE IT
தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தியில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி சூரிய சக்தி மூலம் 6,090 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி 5,985 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. இந்த எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) எர்னஸ்ட் ரூதர்போர்ட் 2) கரஹரப்ரியாவின் முகாரி ராகம் 3) 8,000 லிட்டர் 4)15 ஆண்டுகள் 5) இந்தியா 6) கண்ணாடி 7) 7 pH இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஓணத்துக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓணத்துக்கு விஜய் இன்று காலை வாழ்த்து தெரிவித்ததை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் மலையாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். விஜய் செய்தது சரியா? கமெண்ட் பதிவிடுங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ‘ரத்தமாரே’ படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர். மூன்று பேரின் வாழ்வில் ‘அச்சம், மடம், பயிர்ப்பு’ என்ற 3 கோணங்களில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக கொண்டு ‘ரத்தமாரே’ படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. அறிமுக இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்மு அபிராமி, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பயத்தில் ஆழ்த்தி சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரமே (ரேப்) என்று அலகாபாத் HC தீர்ப்பளித்துள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தொடுத்த மேல்முறையீடு மனு, அலகாபாத் HCஇல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் 2 பேரும் நன்கறிவர், ஆதலால் இது ரேப் இல்லை என வாதிடப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், ஏமாற்றியோ (அ) பயத்தில் ஆழ்த்தியோ சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் என தீர்ப்பளித்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் விஷால் தரிசனம் செய்தார். மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்ட அவர், சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார். கோயிலுக்கு வெளியே ரசிகர்கள் அவரை சூழ்ந்த கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் விஷாலுடன் திருச்சி ஆதீனமும் இணைந்து சாமி தரிசனம் செய்தனர்.
அசைவ உணவுகளை எடுத்து கொண்ட பிறகு சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக உணவு எடுத்துக் கொண்ட பிறகு செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும். இந்த நேரத்தில் ஐஸ்கிரீம், சோடா போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுப்பது அதனை மட்டுப்படுத்துவதோடு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இவற்றை உடனே உட்கொள்ளாதீர்கள்.
நடிகர் விஜய் கட்சியோடு, DMDK கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சி துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதிலளித்துள்ளார். முதலில் விஜய் தனது மாநாட்டை நடத்தி முடித்துவிட்டு, தனது கட்சி கொள்கைகள் குறித்து அறிவித்தால் அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் மகிழ்ச்சி என்றும், கடந்த 2016 தேர்தலில் அதை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.