India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ள படம், கிராமத்து கதையம்சம் கொண்டதாக இருக்கும் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். ‘திருச்சிற்றம்பலம்’ பட வெற்றிக்கு பின்னர் இருவரும் இணையும் புதிய படத்திற்கு, தற்காலிகமாக ‘DD4′ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் இயக்கும் 4ஆவது திரைப்படமாகும். இதில் அருண் விஜய், அசோக் செல்வன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என கூறியுள்ளது.
விராட் கோலி தன்னுடைய Captaincy-யில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதாக பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இன்று இந்திய அணியில் விளையாடும் பல வீரர்கள் தன்னுடன் விளையாடியவர்கள் தான் என்றும், தசைநார்களில் காயம் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அன்றைய சூழலில் தான் ஒரு நல்ல கிரிக்கெட்டர் என கூறியுள்ளார்.
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு CM ஸ்டாலின் இன்று காலை அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். தற்போது அவர்கள் தட்சுல்லா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2023- 24ஆம் நிதியாண்டில், GST வரி ஏய்ப்பு ₹2.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. துறை வாரியான அதன் விவரம்: ➤ஆன்லைன் விளையாட்டு – ₹81,875 கோடி ➤நிதி & காப்பீட்டு துறை – ₹18,961 கோடி ➤உலோகத் துறை – ₹16,806 கோடி ➤பான் மசாலா, புகையிலை, சிகரெட் – ₹5,794 கோடி ➤பணி ஒப்பந்தத் துறை – ₹2,846 கோடி ➤பிளைவுட், டிம்பர் & பேப்பர் – ₹1,196 கோடி ➤மின்னணு பொருட்கள் – ₹1,165 கோடி ➤மருத்துவத் துறை – ₹40 கோடி.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இம்மாதத்திற்கான தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு புதிதாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. உங்கள் கணக்கில் பணம் வந்ததா? செக் பண்ணுங்க.
பிஹாரில் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ‘ஜன் சுராஜ்’ அமைப்பின் தலைவரான அவர், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டுமே தவிர, மொத்தமாக தடை விதிக்க முடியாது என்றார். இதனால் பிஹாருக்கு வர வேண்டிய ₹20 ஆயிரம் கோடி கலால் வரி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். பிஹாரில் 2025இல் நடைபெறவுள்ள தேர்தலில் அவர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி TVK தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில் “சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது. ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த அண்ணாவின் பிறந்தநாளில், அவரது பணிகளை போற்றி மகிழ்வோம்” எனக் கூறியுள்ளார்.
2023 -24ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் ₹2.01 லட்சம் கோடி மதிப்பிலான GST மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. GST புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ₹70,985 கோடி மோசடி நடந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (₹18,313 கோடி), புனே (₹17,328 கோடி), குருகிராம் (₹15,502), ஹைதராபாத் (₹11,081 கோடி) வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார். BAN அணிக்கு எதிரான விளையாடவுள்ள அவர், தனது உடற்தகுதி & ஆட்டத் திறனை மேம்படுத்த சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.