India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுகவுக்கு தகுதி இல்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது. அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர், கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு கூட அண்ணா பெயரை திமுக அரசு வைக்கவில்லை, கருணாநிதி புகழை பாடி கொண்டுள்ளது என்று சாடினார். அண்ணா கொள்கை மறைக்கப்பட்டு RSS கிளையாக திமுக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்
நடப்பு கல்வியாண்டிற்கான கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் முதல் ஜனவரி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், அக்.7-10ஆம் தேதி வரை முதல்கட்ட தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-9ஆம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
கார்த்தியின் 29வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் தயாரிக்கும் இப்படத்தை ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ல் படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 1960ல் நடந்த கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, பிளாக் & வொயிட்டில் கடலில் கப்பல் செல்வது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு இது போதும் எனத் தோன்றும் போது, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எப்போதுமே, எதிர்காலத்தை கணக்கில் வைத்துக்கொண்டது கிடையாது எனக் கூறிய அவர், இன்று மட்டுமே தான் வாழ விரும்புகிறேன் என்றார். மேலும், வயதாகும்போது கூடுதல் பயிற்சி தேவை என்பதால், கடந்த 3 ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன் கூட்டணியில் அதிகாரப் பகிர்வு கேட்பது நியாயமான கோரிக்கை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், அவரின் கோரிக்கைக்கு பாஜக 100% ஆதரவு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 1977ஆம் ஆண்டு முதல் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதாக சுட்டிக் காட்டிய திருமா, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும் கூட, அதிகாரத்தை சமமாக பகிர்ந்துள்ளதாக பாராட்டியிருந்தார்.
பெங்களூருவில் ஓலா EV ஸ்கூட்டர் வாங்கிய விரக்தியடைந்த பெண் ஒருவரின் பதிவு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் பயனற்ற EV, இதை வாங்க வேண்டாம் என எழுதிய பதாகையை வண்டியின் முன் வைத்து எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அடிக்கடி breakdown, சாப்ட்வேர் பிரச்னைகளின் விரக்தியில் அவர் இதை செய்துள்ளார். சமீபத்தில் ஓலா EV வாங்கிய ஒருவர், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் எங்கும் செல்ல மாட்டார் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுவிலக்கு குறித்த திமுகவின் கொள்கைகளை, 2016 தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், திருமாவளவன் கருத்து குறித்து CM ஸ்டாலின் விளக்கம் தந்துவிட்டதாகவும் கூறினார். முன்னதாக அக்.2 மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு திருமா., அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பநிலை மந்தமாகவே இருந்தது. இந்நிலையில், நாளை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக் கூட கவர்ந்து விடுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆண்டியோ அரசனோ எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகும் பண்பும்,
நேர்மை, ஒழுக்கம், உண்மை, அறிவு ஆகியவற்றை மதிக்கும் குணமும் கொண்டிருப்பீர்கள். கற்பனை வளம், கலை ஆர்வம் உங்களிடம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளின் உச்ச வரம்பு அதிகரிப்பும் நாளை அமலாகிறது. முன்னதாக ₹1 லட்சம் வரை UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்த முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.