India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மது ஒழிப்பு மாநாட்டு பிரச்னையை பெரிதுபடுத்தி கூட்டணியை உடைக்க முயற்சிப்பதாக சாடிய அவர், மாநாடு அறிவித்ததில் எந்த கணக்கும் இல்லை என்று விளக்கமளித்தார். மது ஒழிப்பு குறித்து இவ்வளவு நாள் எதற்கு பேசவில்லை என கேட்பதாகவும், இத்தனை நாள் தான் பேசியதை யாரும் கவனிக்கவில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
மருத்துவத்துறையில் குதிரைவாலி நண்டுவின் 1லி ரத்தத்தின் மதிப்பு ₹13 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்டீரியா மாசுபாட்டை கண்டறியும் திறன் இந்த ரத்தத்தில் இருப்பதால் இவ்வளவு மதிப்பு என கூறப்படுகிறது. டைனாசர் காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் இவ்வுயிரினம், அழிவின் தருவாயில் உள்ளது. இதுவரை 60 லட்சம் நண்டுகளிடம் ரத்தம் எடுக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டுள்ளன.
திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உறுதி அளித்துள்ளார். திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டி விட வேண்டும் என இந்துத்துவ சக்திகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக இருப்போம் என்றும், மதிமுகவின் ஒரு தொண்டன் ஆயிரம் பேருக்குச் சமம் எனவும் அவர் சூளுரைத்தார்.
டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில், விரலில் எழும்பு முறிவு காயத்துடன் ஈட்டி எறிந்ததாக வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பயிற்சியின் போது இடதுகை விரலில் காயம் ஏற்பட்டதாகவும், இறுதிப்போட்டி என்பதால் இது வலி மிகுந்த சவாலாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 87.86மீ ஈட்டி எறிந்த நீரஜ், வெறும் 1செ.மீ வித்தியாசத்தில் கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸிடம் தங்கத்தை தவறவிட்டார்.
கேரளாவின் பாலக்காடு பகுதியில் இட்லி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்தார். ஓணம் பண்டிகையையொட்டி, அங்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. அதில், சுரேஷ் (49) என்பவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டார். ஒரே வாயில் 3 இட்லியை சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
கவின் மற்றும் இயக்குநர் நெல்சன், நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாயில் உள்ள மாலில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நெல்சன் மற்றும் கவின் அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அஜித் ஒயிட் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாக சால்ட்&பேப்பர் லுக்கில் உள்ளார். அஜித் லுக் எப்படி இருக்கு கமண்டல சொல்லுங்க
கேரளா மாநிலம் மலப்புரத்தில் சமீபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வந்த அந்த நபர் செப்.9ல் உயிரிழந்ததாகவும், புனே ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் வைரஸ் பாதிப்பால் அவர் இறந்தது தெரிய வந்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். இதையடுத்து, இறந்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
CM ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்திக்க உள்ளார். தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் திருமா, அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேசிய கருத்துகள் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், கூட்டணி முடிவுக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், இச்சந்திப்பு நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நிதின் கட்கரியின் பேச்சு மோடிக்கான செய்தி என INDIA கூட்டணி எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார். பிரதமர் பதவிக்கு தன்னை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் முன்வந்ததாக கட்கரி பேசியிருந்தார். பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற விருப்பத்தை, எதிர்கட்சிகளை சாக்கு காட்டி மோடிக்கு கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியில் வலுவான தலைவர்கள் இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021 முதல் ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ செயல்படுத்தப்படுகிறது. இதில், 6-9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அவ்வப்போது தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பல கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். இதன்மூலம், கற்றல் திறன் குறைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதுடன் உயர்கல்வி படிக்கவும் ஊக்குவிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.