India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்திலுள்ள புஜ் – அகமதாபாத் இடையே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சுமார் 335 km தூரமுள்ள இந்த தொலைவை, இந்த ரயில் 5 மணி 45 நிமிடத்தில் கடக்கிறது. 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் 1,150 பயணிகள் பயணிக்கலாம். வந்தே பாரத் ரயிலில் உள்ளதை போன்று CCTV, சார்ஜிங் பாயிண்ட், தானியங்கி கதவு உள்ளிட்ட அம்சங்கள் இந்த ரயிலிலும் இருக்கிறது.
பஞ்சபூத தலங்களில் நில தலமான காஞ்சி ஏகாம்பரநாதரை வழிபட்டால் இல்லறம் செழிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஏலவார்குழலி பிருத்வி (மண்) லிங்கம் செய்து வழிபட்டு, பாவ விமோசனம் அடைந்து ஈசனை மணந்து அருளிய 3,500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலுக்குச் சென்று, இறைவனுக்கு வில்வ இலை மாலை சாற்றி, அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால் திருமண வரமும், குழந்தை பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.
தனக்கு இருக்கும் துணிச்சல் மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் விளாசி உள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தனது கருத்தை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்று கொண்டதாக கூறினார். ஆனால், தன்னை போல் பேசும் துணிச்சல் இல்லாததால், நிர்வாகிகள் பலர் தன்னை மன ரீதியாக வாழ்த்துவதாக அவர் கூறினார். உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், தொழில்நுட்ப பிரிவில் ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர் பதவிகளுக்கு டெபுடேஷன் அடிப்படையில் 60 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.nhai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ₹2.08 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படும். SHARE IT
மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று வைகோவின் மகனான துரை வைகோ தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி தொடங்கிய நிலையில், துரை வைகோவும் கட்சி பதவி வகிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அரசியலுக்கு வர தனக்கு விருப்பம் இல்லை. தொண்டர்கள் வற்புறுத்தலால் அரசியலுக்கு வந்து, தேர்தலில் போட்டியிட்டதாக கூறினார். துரை வைகோ தெரிவித்தது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க.
ஜனாதிபதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில், சமூகத்தின் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், குரானின் புனிதமான போதனைகளை உள்வாங்கி, அமைதியான சமுதாயத்தை உருவாக்க இந்நன்னாளில் உறுதியேற்போம் எனக் கூறியுள்ளார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. மேலும், சட்டக் கமிஷன் தனது பரிந்துரைகளை விரைவில் அளிக்கவுள்ளது. அதேபோல, கொரோனா பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட Census கணக்கெடுப்பும் விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லையென மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மாலத்தீவில் புதிய அரசு பதவியேற்றதும், இந்தியாவுடன் மனக்கசப்பு இருந்தது உண்மைதான் என்றார். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான தவறான புரிதல் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாவும், சீனாவும்தான் மாலத்தீவுக்கு அதிக கடன்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகை மேகா ஆகாஷ், தனது காதலர் சாய் விஷ்ணுவின் கரம் பிடித்தார். ரஜினி, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் மேகா ஆகாஷ். இவர் சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.
*1914 – முதல் உலகப்போரில் போலந்து மீதான தாக்குதல் ஆரம்பமானது. *1916 – பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம். *1940 – 2ஆம் உலகப்போரில் எகிப்தின் சிதி பரானி நகரை இத்தாலி கைப்பற்றியது. *1945 – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த தினம். *1975 – ஆஸ்திரேலியாவிடம் பப்புவா நியூ கினியா சுதந்திரம் பெற்ற தினம். *1978 – ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 15,000 பேர் உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.