India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரு மொழிக் கொள்கை தொடர்பான கேள்விக்கு ஹெச். ராஜா ஆவேசமாக பதிலளித்தார். “இரு மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் யாரேனும் தங்கள் பிள்ளைகளை, அதை கடைபிடிக்கும் பள்ளியில் சேர்க்கிறார்களா? உன் பிள்ளைகளுக்கு மும்மொழி, ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் இரு மொழியா? ஒருவேளை, விஜய் இருமொழிக் கொள்கையை ஆதரித்தால், அவர் தன் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. 90 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் செப்.18இல் நடைபெறுகிறது. BJP தனியாக தேர்தலை சந்திக்கும் நிலையில், காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. செப்.25 இல் 26 தொகுதிகளுக்கும், அக்.1இல் 40 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் 87 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
கெஜ்ரிவால் முதல்வர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வரிசையில் அமைச்சர் அதிஷி முதலிடத்தில் இருக்கிறார். இவர் 14 துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது அரசு நிர்வாகத்தை இவரே நடத்தினார். அமைச்சர்கள் கோபால் ராய் மற்றும் கைலாஷ் கெலாட்டும் முதல்வர் ரேஸில் இருந்தாலும், அதிஷிக்கு அதிக வாய்ப்புள்ளது.
நடிகைகள் குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தொடர்பாக நடிகை ரோகிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தனது மனைவியை முதல்வராக்கவே, கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. ஊழல் தலைவர் என பெயர் எடுத்ததை மாற்றுவதற்காக ராஜினாமா என்ற நாடகத்தை, கெஜ்ரிவால் அரங்கேற்றி உள்ளதாகவும் சாடியுள்ளது. தன்னை நேர்மையானவன் எனக்கருதி மக்கள் மீண்டும் வாக்களித்தால் மட்டுமே முதல்வர் பதவியில் அமர்வேன் எனக்கூறி, தனது ராஜினாமா தொடர்பான அறிவிப்பை நேற்று கெஜ்ரிவால் வெளியிட்டு இருந்தார்.
வருமான வரி செலுத்துவோருக்கான UPI பணப்பரிவர்த்தனை வரம்பு இன்று முதல் உயர்கிறது. அதன்படி, புதிய உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலாகிறது. மேலும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளின் உச்ச வரம்பும் உயர்கிறது. முன்னதாக ₹1 லட்சம் வரை UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்த முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
➤ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: அரையிறுதியில் இந்தியா- தென்கொரியாவுடன் இன்று மோதுகிறது. ➤F4 கார்பந்தயம்: 2ஆவது நாளில் இந்தியன் ரேசிங் லீக்கில் இந்திய வீரர் முகமது ரியான் வாகை சூடினார். ➤டேவிஸ் டென்னிஸ் கோப்பை: உலக குரூப் – 1 சுற்றில் இந்தியாவை 6ஆவது முறையாக வீழ்த்திய சுவீடன் தகுதி சுற்றுக்கு முன்னேறியது. ➤45ஆவது செஸ் ஒலிம்பியாட்: 5ஆவது ரவுண்டில் இந்திய ஆடவர் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.
➤வெனிசுலா: அதிபர் நிகோலஸ் மதுரோவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வெளிநாட்டினர் 6 பேர் கைது. ➤பிரான்ஸ்: பாஸ்-டி-கலேஸில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற 8 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ➤போலந்து: போரிஸ் புயலால் போலந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்நாடு கடும் பாதிப்பை கண்டுள்ளது. ➤அல்ஜீரியா: அதிபர் டெபோனின் வெற்றியை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தமிழக வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தாமல் வைத்திருந்த நிலங்களை தனிநபர்கள் பயன்படுத்துவதால், அதனை மீட்க முடியாத நிலை உள்ளது. இதனால், தனியாரிடமிருந்து மொத்தமாக நிலத்தை பெற்று குடியிருப்பு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இதனை சாதகமாக்கி மலிவு விலைக்கு நிலத்தை வாங்கி, வாரியத்திடம் அதிக விலைக்கு சில நிறுவனங்கள் விற்கின்றன. இது வீடுகளின் விலை மேலும் உயர வழிவகுப்பதாக பயனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா , தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.