India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. எனினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இது, அவர் மீதான இரண்டாவது கொலை முயற்சி. இந்நிலையில், இதுகுறித்து அவரது ஆதரவாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கூறுகையில், “ஏன் இதுவரை கமலா ஹாரிஸ் மீதும், பைடன் மீதும் கொலை முயற்சி நடக்கவில்லை” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
பங்குச்சந்தையில் லாபகரமான வர்த்தகராக இருக்க விரும்புபவர்கள் எப்போதுமே தங்களது வர்த்தக மூலதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பங்குச்சந்தையில் தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்காமல், பேக்-டெஸ்டிங், ஸ்டாப் லாஸ் & கன்சர்வேடிவ் முதலீடு போன்ற உத்திகளை கையாள்வது அவசியம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். முன்னெச்சரிக்கை & திட்டமிடல் இன்றி வணிகம் செய்வது ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித் தொலைக்காட்சியில் இன்று முதல் 20ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நேரலையாக காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என்றும், பிறகு மறுஒளிபரப்பு இரவு 7- 9 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
தங்கம் விலை சவரனுக்கு ₹55,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து, ஒரு சவரன் ₹55,040க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ஒரு கிராம் ₹6,880க்கும் விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து 1 கிராம் ₹98க்கு விற்பனையாகிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக ஜூன் மாதம் ₹51,000க்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் உச்சம் தொடுகிறது.
1) நவீன வேதியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) Art Forms of Nature என்ற நூலின் ஆசிரியர் யார் ? 3) இந்தியாவில் எந்த மாநிலத்தில் எமர்ஜென்சி அதிகமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது? 4) காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன? 5) மின்னலின் சராசரி நீளம் என்ன? 6) பாரமானியில் திரவமாகப் பயன்படும் பொருள் எது? 7) தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சென்னையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க கொண்டு சென்ற போது, போலீசாரால் தடை செய்யப்பட்ட வழியாக சிலர் சிலைகளை கொண்டு செல்ல முயன்றனர். இதனையடுத்து, அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அமெரிக்காவின் பாதுகாப்பு & தொழில்நுட்ப சார்ந்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அமைப்பு தேசிய அறிவியல் கழகமாகும். அதன் இயக்குநராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் பேரா.சேதுராமன். பைடன் & டிரம்ப் இருவரது ஆதரவை பெற்ற இந்த தமிழன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான 3 அதிநவீன கருவிகளை உருவாக்கியுள்ளார். 425-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இளையோருக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ பகீர் தகவலை கூறியுள்ளது. இவ்வழக்கில் கைதாகியுள்ள மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தான், பெண் மருத்துவர் கொலை தொடர்பான தடயங்களை அழித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு டாலா காவல் நிலைய ஆய்வாளர் மண்டல் உடந்தையாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் இவ்வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி பெங்களூருவில் 25 லட்சம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி நடைபெற்றது. கர்நாடக அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 2,500 KM நீளத்திற்கு நடைபெற்ற இந்த மனித சங்கிலியில், 31 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். இவ்வளவு தூரத்திற்கு மனித சங்கிலி நடப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
சினிமாவில் முத்தக் காட்சிகளிலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். ஊடகமொன்றில் பேசிய அவர், நெருக்கமான காட்சிகளை படமாக்கும்போது எல்லா சினிமா படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு Intimate Coordinator-ஐ நியமிப்பார்கள். எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்லி கொடுப்பார்கள். கலைஞர்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.