India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “2016 தேர்தலில் ஸ்டாலின் என்ன சொன்னார்? ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கில் தான் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அந்த நினைவு அவருக்கு வரவில்லை. கனிமொழி அவர்களே, நீங்கள் தெரு தெருவாக சென்று, மதுவால் பெண்கள் தாலி அறுக்குறாங்கனு கதறுனீங்களே. இப்போது ஏன் அமைதி ஆயிட்டீங்க” எனக் கேள்வியெழுப்பினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். ஆட்சியில் பங்கு குறித்து திருமாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது. தனது செயல்பாடுகளால் கூட்டணியில் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள தயார் என பேசியிருந்தார். இந்நிலையில், இச்சந்திப்பின் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முதல்வருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்து, இனி பத்திரிக்கை அடிக்க வேண்டாம் என திமுக எம்.பி கனிமொழி கேட்டுக்கொண்டார். அழைப்பிதழ் ஒன்றில் பலரது பெயருக்கு பின்னால் சாதி பெயர் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற காழ்ப்பு இருக்கக்கூடாது என்றார். மேலும், நாம் அனைவரும் சமமானவர்கள் இப்படி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
‘தி பியர்’ தொடரில் நடித்த ஜெர்மி ஆலன் ஒயிட்டிற்கு இந்த ஆண்டுக்கான எம்மி விருது வழங்கப்பட்டது. ‘ஹேக்ஸ்’ தொடரில் நடித்த ஜீன் ஸ்மார்ட் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். இவை தவிர சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சி என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கோரி திருமாவளவன் அறிவித்துள்ள மது ஒழிப்பு மாநாடு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திமுகவை மிரட்டுவதற்காக தான் இந்த மாநாடு என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மாநாடு தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திக்கவுள்ளார். முன்னதாக, இதுகுறித்து பேசிய அவர், “மது ஒழிப்பு மாநாட்டிற்கு முதல்வருக்கும் அழைப்பு விடுப்பேன்” என்றார்.
அவசர தேவை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் Second Hand பொருட்களை பலர் வாங்குவது வழக்கம். எந்த காரணமாக இருந்தாலும் சரி, ஆடியோ அக்ஸஸெரீஸ்களை செகண்ட் ஹேண்டில் வாங்க கூடாதென டெக்கிஸ் அறிவுறுத்துகின்றனர். இவை PreHack செய்யப்பட்டால் அந்நியர்களுக்கு சாதகமான அணுகலை வழங்கி, நமது Privacyக்கு அச்சுறுத்தல் அளிக்கலாம். அத்துடன், பழைய நிலையில் Audio Experience கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
பெண் நடன கலைஞர் அளித்த புகாரின் பேரில் நடன இயக்குநர் ஜானி மீது ராய்துர்காம் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டரின் நடன குழுவில் இணைந்து பணியாற்றிய போது ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். 2019இல் நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக 6 மாதம் ஜானி மாஸ்டர் சிறையில் இருந்தார்.
3 கேரட், ஒரு ஆப்பிள், அரை விரல் இஞ்சியை (தோல் சீவி) எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நறுக்கி மிக்சியில் தண்ணீர் சேர்த்து ஜூஸ் அடியுங்கள். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரண்டே வாரங்களில் முகம் ஜொலிக்கும். கேரட், ஆப்பிளில் உள்ள A,K,C வைட்டமின்கள் Antioxidants-களையும், கொலாஜனையும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இஞ்சி உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. இதுவே முகம் பிரகாசிக்க காரணம்.
RSS தலைவர் மோகன் பகவத் இந்து மதத்தினருக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தினர் சாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவர் மீதும் நல்ல எண்ணத்தோடு இருக்க வேண்டும். இந்துக்கள் தான் உலகிலேயே பெருந்தன்மை மிக்கவர்கள். இது நமது மூதாதையர்களிடம் இருந்து நமக்கு கிடைத்த சொத்து” என விளக்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு பொது விடுமுறை ஆகும். மிலாடி நபியை முன்னிட்டு முதலில் 16ம் தேதி (இன்று) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறை தெரியாத காரணத்தால் மிலாடி நபி நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விடுமுறை 17ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் நாளை திறக்கப்படாது.
Sorry, no posts matched your criteria.