India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாட்டை அறிவித்ததை அடுத்து, திருமா மீது திமுக ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விசிகவின் இந்த செயலால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குதூகலத்தில் இருப்பதோடு, திமுகவையும் அவை விமர்சித்தும் வருகின்றன. இதனால் பொறுமையிழந்த திமுக ஆதரவாளர்கள் பலர், சமூக வலைதளங்களில் விசிகவுக்கும், திருமாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஊழல் வழக்கில் சிறை சென்று வந்ததால், முதல்வர் பதவியை கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்யவுள்ளார். இதுகுறித்து பேசிய அன்னா ஹசாரே, “அரசியல் வேண்டாம் என பல முறை கெஜ்ரிவாலிடம் கூறினேன். அவர் கேட்கவில்லை. இன்று என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துள்ளது” என்றார். கடந்த 2011-ல் ஹசாரே தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடியவர் கெஜ்ரிவால். பிறகு, அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.
மகாராஷ்டிராவில் நவம்பர் 2ஆவது வாரத்தில் தேர்தல் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மஹாயுதி கூட்டணியில் 8 முதல் 10 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும் என்று குறிப்பிட்ட அவர், 2 கட்டமாக தேர்தல் நடத்தினால் நல்லது எனவும் கூறியுள்ளார். மஹாயுதி கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் உள்ளன.
பொது இடத்தில் ஏதேனும் ஆபாசமானச் செயலைப் புரிந்தாலோ அல்லது ஏதேனும் ஆபாசமான பாடலைப் பாடினாலோ, ஆபாசமான வார்த்தைகளை சொன்னாலோ அல்லது வாசகத்தை உச்சரித்தாலோ BNS சட்டப் பிரிவு 296இன் படி குற்றமாகும். இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ்வுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. தெலங்கானாவில் உள்ள கோயிலில் நடந்த திருமண விழாவுக்கு, குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தம்பதிக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மது ஒழிப்பு மாநாட்டை முன்னிறுத்தி திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். ஆட்சியில் பங்கு என வீடியோ வெளியிட்டு விட்டு, திமுகவோடு எங்களுக்கு எந்த முரணும் இல்லை, கூட்டணி தொடரும் என்று திருமா சொல்வது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் லாபத்திற்காகவே மது ஒழிப்பு என்ற போர்வையில் விசிக அரசியல் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப். 20ல் நடைபெற உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாஃசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
IND அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று BAN அணியின் கேப்டன் = நஜ்முல் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். டாக்காவில் பேசிய அவர், பாகிஸ்தானில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக கைப்பற்றினோம். இந்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது. அதை போலவே சென்னை, கான்பூரில் நடைபெறும் தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்றார்.
Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலைக்கு வரும் 28இல் CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். பனப்பாக்கத்தில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையவுள்ள Tata Motors நிறுவனத்தின் இந்த ஆலை மூலம், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், அங்கு ரூ.400 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலையையும் CM தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 20 ஆயிரம் பேர் பலனடைவார்கள்.
பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடுமைகளை 8 வயதிலிருந்தே தான் சந்தித்து வருவதாக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் வேதனையுடன் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக திரைத் துறையில் தான் எந்தவித துன்புறுத்தலையும் சந்திக்கவில்லை எனக் கூறிய அவர், சினிமாவை விட வெளியில்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகக் கூறியுள்ளார். அத்துடன், பாலியல் துன்புறுத்தல்களைக் கண்காணிக்க முறையான கட்டமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.