India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
VCK மது ஒழிப்பு மாநாடும், ஒருவகையான அரசியல்தான் என TN CONG தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அரசியல் இல்லாமல் எதுவுமில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஒன்றுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மதுவிலக்கை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காமல், ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 51 அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களை (Assistant Public Prosecutor Grade-II) நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு (BL). 5 ஆண்டுகளுக்கு மேல் பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து, கிரிமினல் கோர்ட்டுகளில் வழக்கு நடத்தி இருக்க வேண்டும். வயது வரம்பு: 26 – 36. www.tnpsc.gov.in -இல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: அக்.12
2020 ஆஸி., அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் சோர்ந்திருந்த வீரர்களுக்கு அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரவு உணவு ஏற்பாடு செய்ததோடு ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்தி உற்சாகப்படுத்தியதாகவும், அதன் பின்னர் நடந்த டெஸ்டில் இந்திய அணி வென்றதாகவும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியர்களின் நுகர்வு நடவடிக்கைகள் & முறைகளைப் புரிந்துகொள்ள Zepto போன்ற விரைவு வர்த்தக தளங்களின் தரவைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. FMCG நிறுவனங்களின் வேகமாக வளர்ந்து வரும் விற்பனை சேனலான இ-காமர்ஸ் சந்தை 2024 ஜூனில், 20% (மளிகை விற்பனை 40%) வளர்ந்துள்ளது. 2021-23இல் 230% வளர்ச்சி அடைந்த இத்துறை, இந்த நிதியாண்டில் 85% வளர்ச்சியடைந்து ₹50,322 கோடியைத் தொடும் என நம்பப்படுகிறது.
முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்யவுள்ளதாக அம்மாநில அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் கூறியுள்ளார். துணை நிலை ஆளுநரை சந்தித்து கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாகவும், ஒரு வாரத்தில் எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் மன்றத்தில் நிரபராதி என்ற நிரூபித்த பிறகே மீண்டும் முதல்வராவேன் என கெஜ்ரிவால் நேற்று கூறியிருந்தார்.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) லாவோசியர் 2) எர்ன்ஸ்ட் ஹேக்கல் 3) கேரளா & உ.பி., 4) 70,000 வகைகள் 5) 6 கி.மீ., 6) பாதரசம் 7) நீலாம்பரி ராகம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
உலகளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரக நோயின் 8 அறிகுறிகளைப் பற்றி காண்போம்: 1) குமட்டல் & வாந்தி 2) பசியின்மை 3) கால் வீக்கம் 4) மூச்சுத்திணறல் 5) தூக்கமின்மை 6) அதிக நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் 7) உடல் அரிப்பு 8) முதுகு & அடி வயிறு வலி ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்!
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடந்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு எத்தகைய சென்சஸை நடத்தவுள்ளதென தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் சென்சஸ் நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக 2020இல் நடத்தியிருக்க வேண்டிய கணக்கெடுப்பை அரசு ஒத்திவைத்தது.
‘ஆலித் தெழுந்தநோய் அத்தனையும் தீருமே’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் உத்தாமணியின் ஆற்றலைப் போற்றுகிறது. டெர்பினாய்டுஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், டானின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் இலைச் சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவைத்து, பசை போலச் செய்து வாத நோயால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டால், உடனடியாக வீக்கம் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-4°C இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.