India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.17) கடைசி நாளாகும். NURSING OFFICER பணிக்கு Diploma, B.Sc., Nursing முடித்த 21 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <
3வது முறை ஆட்சியில், PM மோடியின் அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மத்தியில் 3ஆவது முறையாக ஆட்சி அமைந்து 100 நாள்கள் நிறைவு பெற்றதை பாஜக கொண்டாடி வருகிறது. இதனை X தளத்தில் விமர்சித்த காங்கிரஸ், முதல் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களையும் காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தும் எரிபொருள் மீதான மோடி அரசின் கொள்ளை தொடர்வதாக காங். தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய Crude Oil விலை நிலவரப்படி, பெட்ரோல் ₹69க்கும், டீசல் ₹48.27க்கும் விற்கப்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். கடந்த 10 வருடம் 100 நாளில் எரிபொருள் மீதான வரி மூலம் 35 லட்சம் கோடி மக்களிடம் மோடி அரசு கொள்ளையடித்துள்ளதாகவும் சாடினார்.
2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரிகளை செப்டம்பர் 20 முதல் நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை செய்தியை, பயனாளர்களுக்கு கூகுள் அனுப்பி வருகிறது. அதே நேரத்தில் பள்ளி, அலுவலகம், இதர தொழில்துறை என நிறுவனங்கள் சார்பில் உருவாக்கி வழங்கப்பட்ட ஜிமெயில் முகவரிகள் நீக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. உங்க ID ஆக்டிவா இருக்கா? Check பண்ணிட்டு கமெண்ட்ல சொல்லுங்க.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடப்பதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது.
தூத்துக்குடி VOC துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச கண்டெய்னர் முனையத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதனை காணொலி வாயிலாக திறந்துவைத்து பேசிய அவர், இந்த முனையம் VOC துறைமுக தளவாடச் செலவுகளைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணியை உயர்த்தவும் உதவும் என்றார். மேலும், தமிழகம் கடல்சார் வர்த்தக வலையமைப்பின் முக்கிய மையமாக உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
கணவர் மீதிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை என, திருமணமான 40 நாள்களில் பெண் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார். உ.பி., ஆக்ராவைச் சேர்ந்த ராஜேஷ், கங்கை நதி நீரை வாரம் ஒருமுறை தெளித்துக் கொள்வார் எனத் தெரிகிறது. மேலும் மனைவி வற்புறுத்ததால் 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் இருந்து பிரிய முடிவெடுத்த பெண் கோர்ட்டை நாடியுள்ளார்.
CM ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்காக திமுக சீனியர்களை கூட CM வெளியே இருக்க சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமா பேசியது சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறர் சொல்வதை விட, சுய விருப்பத்தின்படியே செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கஷ்டங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் சர்வசாதாரணமாகக் கடந்து செல்வீர்கள். வேகம், விவேகம், தன்னம்பிக்கை, தைரியம், நினைத்த காரியத்தை முடிக்கும் குணம் உங்களிடம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
பள்ளிக் குழந்தைகள் அணிவதற்காக குறைந்த விலையில் ஸ்மார்ட் வாட்சை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பல பள்ளிகளில் குழந்தைகள் ஃபோன் கொண்டு வர அனுமதி இல்லை என்பது தெரிந்ததே. இந்நிலையில், பள்ளிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த வாட்ச்கள் மூலம் குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோர் தொடர்பில் இருக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த வாட்ச் 2025இல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.