India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘தனுஷ் எனக்கு நல்ல நண்பர் தான்’ என்று கூறி, பரவி வந்த கிசுகிசுவை நாசுக்காக அமைதிப்படுத்திய மிருணாள் தாகூர், தற்போது மீண்டும் வைரலாகிறார். ‘Accidental magic is the best creation’ (தற்செயலான மேஜிக் தான் சிறந்த உருவாக்கம்) என்ற சொல்லுடன் இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டார் தனுஷ். இதற்கு மிருணாள் லைக்கை தட்டிவிட, ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்று நெட்டிசன்கள் மீண்டும் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
1+ 1 = 3 என குட்டி கால் தடங்கள் இருக்கும் கேக்கை பதிவிட்டு, பிரபல பாலிவுட் பட நடிகை பரினீதி சோப்ரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இவர், 2023-ல் ஆம் ஆத்மி கட்சி MP ராகவ் சத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான பரினீதி, Ishq, Shuddh desi romance, Golmaal again என மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார்.
ஆக.28-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்கு புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி CM <<17460200>>ரேகா குப்தாவை<<>> அறைந்த ராஜேஷ் சகாரியா, விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். CM ரேகா குப்தாவை கத்தியால் குத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக கத்தியை வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தெருநாய்களை அகற்றுவதற்கு எதிரான தனது கோரிக்கையை CM ரேகா குப்தா நிராகரித்ததன் காரணமாகவே தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் (வேப்பூர் அருகில்) ஜனவரி 9-ம் தேதி தேமுதிக ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O’ நடைபெறும் என்று விஜயகாந்த் பிறந்தநாளான இன்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வுலகில் 8.2 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2022-ம் ஆண்டு வரை சுமார் 700 மில்லியன் மக்கள் பசியில் வாடியதாக தரவுகள் சொல்கிறது. ஆனால், அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 2040-க்குள் இதன் எண்ணிக்கை 1.1 பில்லியனாக உயரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, பிளாஸ்டிக் பயன்பாடும், அதன் கழிவுகளும் மண்ணை நாசம் செய்வதே காரணம் எனவும், அது அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.