India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பரிலும் அனல் காற்று வீசுவதால் தமிழக மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 105°F, மதுரை நகரம் 104 °F, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102°F, கரூர் பரமத்தியில் 101°F, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம் , கடலூர், திருச்சியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விளையாடவுள்ளதாக PTI தெரிவித்துள்ளது. இதனால், ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. 15/09/24 அன்று 6401 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 6090 MW-ஐ (12.09.2024) விஞ்சியுள்ளது. இந்த சாதனை நிலையான ஆற்றலுக்கான தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், சூரிய மின்சக்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால், வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவது, மனிதர்கள் வாழ்வில் பல சாதகமான நிகழ்வுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக செரிமானம், நிம்மதியான தூக்கம், எடை மேலாண்மை, ஹார்மோனில் சமநிலை, ரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாடு, மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்றம் ஏற்படும் எனக் கூறுகின்றனர். இதனிடையே, வேண்டா வெறுப்பாக இரவு உணவு சாப்பிடுவதும் உடல்நலத்திற்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ₹11 லட்சம் தருவதாக சிவசேனா (ஷிண்டே அணி) MLA சஞ்சய் கெய்க்வாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பேசிய ராகுல், நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்., ஆலோசிக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், காங்., இடஒதுக்கீட்டை ஒழிக்க பார்ப்பதாக கூறிய சஞ்சய், கண்டனம் தெரிவித்துள்ளார்.
RJ பாலாஜி இயக்கி, நடித்து கடந்த 2020ல் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. நயன்தாரா அம்மனாக நடித்திருந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குவார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதிலும் நயன்தாராதான் அம்மனாக நடிக்க உள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில், 17,810 அரசு நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அப்போது, மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்ததாகவும், அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் DSE கூறியுள்ளது. முன்னதாக, அரசுப் பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். உங்கள் பள்ளியில் ஆய்வு நடந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக முன்னாள் MLA ப.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை டெல்லி துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், நாளை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதற்காகவே துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், நாளை அவரை சந்தித்தபின் ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானி, ஆந்திரா துணை CM பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது ராயதுர்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஜெயிலர், வாரிசு, பீஸ்ட், <<14113495>>திருச்சிற்றம்பலம் <<>>போன்ற பல படங்களில் அவர் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.