India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3ஐ ஏற்பதாக மேற்குவங்க CM மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறினார். பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் இன்று மோதுகிறது. ஏற்கெனவே லீக் போட்டியில் 3 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை இந்தியா துவம்சம் செய்திருந்தது. இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு மகுடத்திற்கான இறுதி சுற்றில் இந்திய அணி விளையாடவுள்ளது. முன்னதாக, 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மோதுகின்றன. All the best team India.
தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை இன்று வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், தென் மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால், வெப்பநிலை அதிகரித்து அசெளகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளார். இதற்கிடையே, புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்படி ECக்கு AAP கோரிக்கை விடுத்துள்ளது.
‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான பிரியா ஆனந்த், தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, இந்தி என பல மொழிகள் அறிந்தவர். ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’, ‘இரும்பு குதிரை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அவர், இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். HBD பிரியா ஆனந்த்.
தனது பெயரை மோசடி நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சல்மான் கான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தான் அமெரிக்காவில் கான்சர்ட் நடத்த இருப்பதாக பரவும் தகவல் உண்மையல்ல என மறுத்துள்ளார். மேலும், இதுபோன்ற விளம்பரங்கள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
*1879 – திக நிறுவனர் பெரியார் பிறந்தார். *1949 – திகவில் இருந்து பிரிந்த அண்ணா, திமுக என்ற அரசியல் கட்சி தொடங்கினார். *1950 – இந்தியாவின் பிரதமர் மோடி பிறந்தார். *1953 – தமிழறிஞர் திருவிக காலமானார். 1987 – இடஒதுக்கீடு கோரி வன்னியர் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிக்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் கல்வி உள்ளிட்டவற்றுக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார். முன்னேறிய சமூகத்தில் பிறந்திருந்தாலும், உயிர் மூச்சு பிரியும் வரை ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தவர். ஆணாக இருந்து பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக முழங்கியவர். ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர். அவரது பிறந்தநாளான இந்த சமூக நீதி நாளில் அவரை நினைவுகூர்வோம்.
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா இன்று கொண்டாடப்படவுள்ளது. அண்ணா, பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல, திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பவள விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதியை உலக நோயாளி பாதுகாப்பு தினமாக WHO அறிவித்துள்ளது. நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதோடு, சுகாதார நலனை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்பை காட்டும்படி மக்களைக் கேட்டுக் கொள்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 26 லட்சம் நோயாளிகள் போதிய கவனிப்பு இல்லாததால் உயிரிழப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
Sorry, no posts matched your criteria.