India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே. வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் பெண் மருத்துவர்களை இரவுப் பணியில் அமர்த்தக் கூடாது என மம்தா அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “பெண்கள் இரவில் பணி செய்யக் கூடாது என எப்படி உங்களால் கூற முடியும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே உங்கள் (அரசு) வேலை. பெண் மருத்துவர்களுக்கு தேவை பாதுகாப்பு தானே தவிர, சலுகை கிடையாது” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் 2-4°C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளது. மாநிலத்தில் மே மாத அக்னி நட்சத்திரத்திற்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40°C மேல் வெயில் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
T20 மகளிர் உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். T20 போட்டிகளில் கடைசி 4-5 ஓவர்கள் மிக முக்கியம் என்றும், அதில் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்.3 முதல் அக்.20 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. IND தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை அக்.4ல் எதிர்கொள்கிறது.
திருமணமான 7 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் (தீக்காயம் & உடற்காயங்கள்) அசாதாரண சூழ்நிலையில் உயிரிழந்தாலோ, இறப்பதற்கு முன் கணவர் அல்லது அவரது உறவினரால் வரதட்சணை கேட்டு கொடுமை & துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிந்தாலோ அந்த மரணம் வரதட்சணை கொடுமை மரணம் என வரையறுக்கப்படும். BNS சட்டப் பிரிவு 80இன் படி குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை வரை தண்டனையாக விதிக்கப்படும்.
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக PMK தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்தினால் மட்டுமே, 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினை சில அமைச்சர்கள் தவறாக வழிநடத்தி வருவதாகவும், அதனால் தான் இடஒதுக்கீட்டை பெறுவதில் காலதாமதம் ஆவதாகவும் அவர் விமர்சித்தார்.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பது போல் தெரிவதாக தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். திராவிட சாயலில் வேறொரு கட்சி தேவையில்லை என்றும், தேசிய சாயலில் வளர வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், விஜய் மாற்றி பயணிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அண்ணா, பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், அவர்கள் வலியுறுத்திய பாதையில் பயணிப்போம் என்று கூறியிருந்தார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் ரிலீஸாகுமென தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களை இத்தகவல் உற்சாகம் அடையச் செய்துள்ளது.
மே.வங்க மக்களின் நம்பிக்கையை இழந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. பெண் மருத்துவர் வழக்கில், மம்தாவே முக்கிய குற்றவாளி என்றும், முதல்வர் பதவியில் தொடர அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும் சாடியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை முதலில் ஏற்க மறுத்த மம்தா, தற்போது 4இல் 3 கோரிக்கையை ஏற்றுள்ளார்.
டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Oxford பல்கலைக்கழகத்தில் படித்த அவர், டெல்லி அரசின் 14 துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது அரசு நிர்வாகத்தை இவர் திறம்பட வழிநடத்தினார். கெஜ்ரிவாலின் அதீத நம்பிக்கையை பெற்ற இவர், BJP தரும் நெருக்கடியை சமாளித்து ஆட்சியை சிறப்பாக நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்ட அமெரிக்காவுக்கே நானோ டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பெருமையை AMES ஆய்வு இயக்குநர் கரூர் தமிழன் மெய்யப்பனையே சேரும். தமிழ்வழியில் படித்த அவர், Nano Technology மூலம் கருவிகளை உருவாக்கி NASA விண்வெளி ஆராய்ச்சிப் பணியை எளிதாக்கியுள்ளார். 350க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர், Sensor 3D Printer போன்ற 25க்கும் மேற்பட்ட படைப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.