India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மேஷம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *ரிஷபம் – தோல்வி உண்டாகும் *மிதுனம் – வெற்றி கிடைக்கும் *கடகம் – உதவி தேவைப்படும் *சிம்மம் – போட்டி உண்டாகும் *கன்னி – அமைதியாக இருங்கள் *துலாம் – தெளிவாக செயல்படுங்கள் *விருச்சிகம் – பொறுமையாக செயல்படுங்கள் *தனுசு – சிறப்பான நாளாக அமையும் *மகரம் – நல்ல சிந்தனையுடன் செயல்படுங்கள் *கும்பம் – நட்பு உருவாகும் *மீனம் – நல்ல செயலில் ஈடுபடுங்கள்.
காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.18, 25, அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து களம் காண்கின்றன. முதல் கட்டமாக நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள அதிஷி (43) தான் நாட்டின் இளம் வயது (தற்போதைய முதல்வர்களில்) முதல்வராக உள்ளார். அதேநேரம் 79 வயதான கேரள முதல்வர் பினராயி விஜயன் வயதான முதல்வராக அறியப்படுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் (71), ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (74), புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (74), கர்நாடக முதல்வர் சித்தராமையா (76) இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ளனர்.
பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், விஜய் செயல்பாடு மூலம், அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும், சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது என திருமா பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பிணக்கு ஏற்பட்ட நிலையில், 2026 தேர்தலை மனதில் வைத்து திருமா அடுத்த காயை நகர்த்த தொடங்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி, காங்., திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாளை பந்த் அறிவித்துள்ளன. இதன் எதிரொலியாக, நாளை 1-8ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்காது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், பஸ்கள், ஆட்டோக்கள் டெம்போக்கள் ஆகியவையும் இயங்காது என தெரிகிறது.
SC நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் PM மோடி கலந்துகொண்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொண்டதற்கு PM விளக்கம் அளித்துள்ளார். “விநாயகர் சதுர்த்தி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, சுதந்திர இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயரைப் போல பிரித்தாளும் கொள்கையுடன் இருப்பதால் காங்கிரசார் இதை விமர்சிக்கின்றனர்” என கூறியுள்ளார்.
அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், பெண் அமைச்சருக்கு அடக்கமும், பணிவும் தேவை என EVKS இளங்கோவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக MLA வானதி சீனிவாசன், தனது பேச்சுக்காக EVKS இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூற நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ₹1.87 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஹைதராபாத்தில் பந்தலகுடா என்ற இடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு மெகா சைஸ் லட்டு படைக்கப்பட்டது. உற்சவத்தின் 11வது நாளில் சிலைகள் கரைக்கப்படும் நாளில் அந்த லட்டு ஏலத்தில் விடப்படும். கடந்த ஆண்டு ₹1.26 கோடிக்கு அந்த லட்டு ஏலம் போன நிலையில், இந்தாண்டு ₹61 லட்சம் கூடுதலாக ஏலம் போயுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸி., பவுலர்கள் இந்திய அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றுத்தருவார்கள் என முன்னாள் ஆஸி., வீரரும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான கில்லெஸ்பி கூறியுள்ளார். ஆஸி., அணியில் இருக்கும் சிறந்த பவுலர்கள் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்கள் என்கிறார்.
பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின் மூலதனம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். PM மோடி இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
Sorry, no posts matched your criteria.