India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். JKவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. ஜூன் 16ஆம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், யூனிட்டுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மின் கட்டண உயர்வு, பிரீபெய்டு திட்டம் மற்றும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பந்த் காரணமாக, 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு லீவ் அறிவிக்கப்பட்டுள்ளது.
*1180 பிரான்சின் மன்னராக பிலிப்பு ஆகுஸ்தசு முடி சூடினார். *1810 – சிலியில் முதலாவது அரசு அமைந்தது. *1919 -நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1922 – உலக நாடுகள் அணியில் அங்கேரி இணைந்தது. *1945 – இரட்டைமலை சீனிவாசன் மறைந்தார். *1959 – வன்கார்ட் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. *1979 – நடிகர் வினய் பிறந்த நாள். *1989 – இந்திய பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா பிறந்த நாள்.
சமையல் எண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை சரிந்ததால், இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில், உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பாமாயில், சோயா, சூரிய காந்தி ஆகியவற்றின் இறக்குமதி வரியை அரசு 20% உயர்த்தியது. இதை காரணம் காட்டி சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் பெண்களின் மனம் கவர்ந்த சாக்லேட் பாயாக வலம் வந்தவர் வினய். ஹீரோவாக திரைப்பயணத்தை தொடங்கிய அவர், தற்போது பல படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். குறிப்பாக, ‘துப்பறிவாளன்’ படத்தில் அவரது கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. இந்நிலையில், 45ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். HBD வினய்.
சம மதிப்புள்ள வேலைக்கு சம ஊதியத்தை பெறுவது ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாலின ஊதிய இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப். 18ஆம் தேதி சர்வதேச சம ஊதிய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
PM மோடிக்கு கிடைத்த 660 வகையான பரிசுப் பொருட்கள் ஏலத்திற்கு வரவுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, பிரதமரின் பரிசுப் பொருட்கள் 5 முறை ஏலம் விடப்பட்ட நிலையில், இந்தாண்டு 6ஆவது முறையாக அக். 2ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பவர்கள் <
வயநாடு நிலச்சரிவு தொடர்பான வரவு செலவு தகவல்கள் பொய்யானவை என கேரள அரசு மறுத்துள்ளது. பேரிடர் நிவாரண நிதியை ஆளும் இடதுசாரி அரசு முறைகேடு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தன்னார்வலர்கள் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை பினராயி விஜயன் அரசு பெற்றதாக பாஜக கூறியது. இந்நிலையில், மத்திய அரசிடம் நிதி பெறும் முயற்சியை தடுக்கவே தவறான தகவல் பரப்பப்படுவதாக கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
*நீங்கள் ரோஜாவாகவோ, தாமரையாகவோ, சாமந்தியாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம். *நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோயில்களும் இல்லை. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை. *உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிபிஐ அறிக்கையை கண்டு SC அதிர்ச்சி அடைந்துள்ளது. சிபிஐ கண்டறிந்துள்ள உண்மைகள் மன அமைதியை குலைப்பதாக வேதனை தெரிவித்த SC தலைமை நீதிபதி சந்திரசூட், விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் விவரங்களை வெளியிடவில்லை என்றார். இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
Sorry, no posts matched your criteria.