India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இறந்த (அ) உயிருடன் உள்ள ஒருவரைப் போல நடித்து (அ) ஒரு நபருக்குப் பதிலாக மற்றொரு நபரைக் காட்டி அல்லது அந்த நபர் வேறொரு ஆள் என்று உண்மைக்கு புறம்பாகக் கூறி, ஒருவரை வஞ்சிப்பதை ‘ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்’ என சட்டம் வரையறுக்கிறது. இது BNS சட்டப் பிரிவு 319 இன் படி குற்றமாகும். இதற்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுவரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
துணை முதல்வர் பதவி குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. USA சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய CM, அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமும் வரும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் கூட்டணி, அதிகாரத்தில் பங்கு என தற்போது அனைத்து கட்சிகளும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். மேலும், மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாகவும், புதிராகவும் உள்ளதாக அவர் சாடினார்.
BAN தொடரில் கோலி அதிக ரன்களை குவிப்பார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். BAN அணியிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், கோலி அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் FINAL செல்வதற்கு இனிவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளின் வெற்றியும் இந்திய அணிக்கு முக்கியம் என்றார். முதல் டெஸ்ட் நாளை சென்னையில் தொடங்குகிறது.
லெபனானில் ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். 4000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இத்தாக்குதலை இஸ்ரேல் அரங்கேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு விரைவில் தண்டனை வழங்கி பழிதீர்ப்போம் என ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது.
கன்னட பட உலகில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டுமென நடிகை சஞ்சனா கல்ராணி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ள அவர், கன்னட பட உலகில் புதுமுக நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை. கன்னட திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
1) இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பினை ஏற்படுத்தியவர்? 2) தீயின் எதிரி என அழைக்கப்படும் வாயு எது? 3) UPS என்பதன் விரிவாக்கம் என்ன? 4) சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்ட மன்னன் யார்? 5) சர்வதேச சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 6) ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? 7) பூனையின் விலங்கியல் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
நேற்றுமுன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ₹55,000ஐ கடந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹120 குறைந்து ஒரு சவரன் ₹54,800க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ஒரு கிராம் ₹6,850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ஒரு கிராம் ₹96க்கும், ஒரு கிலோ ₹96,000க்கும் விற்கப்படுகிறது.
45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் 7ஆவது சுற்று இன்று நடைபெறவுள்ளது. இதில், 12 புள்ளிகளுடன் No 1 இடத்தில் இருக்கும் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ள சீனாவுடன் மோதவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி அக்.31-ம் தேதி வருவதையொட்டி, இதற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒருசில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல, கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.