India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘ஆவாரைக் கண்டோர் சாவோரைக் கண்டதுண்டோ’ எனும் முதுமொழி ஆவாரையின் நித்தியத்தன்மையைப் பறைசாற்றுகிறது. டானின்ஸ், அவாரோஸைடு, அவரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் சூரணத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக பயன்படுத்தி வந்தால் நீரிழிவு நோயின் தீவிரம் குறையும், கல்லீரல் பலப்படும், கைகால்களில் உண்டாகும் எரிச்சல் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
திமுக மூத்த தலைவர்களுடன் 1 மணி நேரமாக CM ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என மூத்த தலைவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நேற்று திமுக பவள விழா மேடையிலேயே கோரிக்கை வைத்தார். இதற்கு கூட்டத்தில் பெரும் ஆதரவு அலை எழுந்தது. தொடர்ந்து, இன்று அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் CM ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு, இனிப்புகளுடன் படையெடுத்துள்ளனர்.
திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ரயில் நிலையத்திற்கு சில கிலோ மீட்டர் துாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கழன்ற பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மீண்டும் இணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 30 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
Digital Transactions அதிகரித்திருப்பதால், மோசடிகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக Online ஷாப்பிங் செய்வோரிடம் அவர்களுக்கே தெரியாமல் கார்டில் (cr & dr) இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்து, தனிப்பட்ட வங்கி தகவலை உள்ளிடாதீர்கள். ‘HTTPS’ கொண்ட Encrypted இணையதளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள்.
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி போல கொலை செய்யப்படுவீர்கள் என்றும், நாக்கை அறுப்போம் எனவும் சிவசேனா எம்எல்ஏ (ஷிண்டே) கூறியது கடும் அதிர்ச்சியை தருகிறது என்றார். ராகுலின் வளர்ச்சியை ஏற்க முடியாமல் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான அரசாங்கத்தால் மட்டுமே தீவிரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க முடியும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியல் மற்றும் பிரிவனைவாதத்தை ஒழிக்க காஷ்மீர் மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர்களை பயன்படுத்தி வந்தது, இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டுக்கு அண்மையில் தெரியவந்தது. இந்த பேஜர்களை தைவானில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஹிஸ்புல்லா வாங்குவதை அறிந்த மொசாட் உளவாளிகள், அங்கு புகுந்து, ஹிஸ்புல்லாவுக்கு விற்கப்பட இருந்த 5,000 பேஜர் பேட்டரிகளில் தலா 5 கிராம் வெடிகுண்டு பவுடர்களை தடவி, இந்த அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை CID சகுந்தலா (85) பெங்களூருவில் நேற்று மாரடைப்பால் காலமானார். சேலத்தை சேர்ந்த அவர், நடன கலைஞராக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்தார். MGR, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், 1998க்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாகை மீன்வளப் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். இணை வேந்தரான அமைச்சர் விழாவை புறக்கணித்த நிலையில், வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், நாகை ஆட்சியரும் விழா அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் புறக்கணித்து வந்த நிலையில், ஆட்சியர் முதல்முறையாக புறக்கணித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.