India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PM மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின்(CIC) உத்தரவை, டெல்லி ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி யுனிவர்சிட்டியில் 1978-ல் டிகிரி பெற்ற மோடி உள்பட அனைவரது விவரங்களை நீரஜ் என்பவர் CIC-யிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த தகவலை வழங்குமாறு யுனிவர்சிட்டிக்கு CIC கூறியிருந்தது. மோடியின் டிகிரி போலியானது என காங்., சாடியது கவனிக்கத்தக்கது.
மிலாடி நபி செப்டம்பர் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனையொட்டி, TNSTC சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்பின், செப்டம்பரில் வார விடுமுறையை தவிர்த்து பிற விடுமுறை இல்லாததால் சொந்த ஊர் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். SHARE IT.
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், வளைக்காப்பின் போது, பெண்களுக்கு கண்டிப்பாக கண்ணாடி வளையல் தான் அணிவிப்பார்கள். இது ஏன் என நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னணியில் ஆன்மீக ரீதியில் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், இதற்கு ஒரு அறிவியல் விளக்கமும் உண்டு. அதாவது, கண்ணாடி வளையலில் இருந்து எழும் ஒலி குழந்தையின் மூளை தூண்டச்செய்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது. SHARE IT.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில், அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, டிவி, ரேடியோ, டிஜிட்டல் சார்ந்த ஊடக படிப்புகள் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. விடுதி வசதியும் உள்ளது. கல்விக்கட்டணம் ₹10,000 ஆகும். செய்முறை பயிற்சிக்கான ஸ்டுடியோக்களும் உள்ளன. நடப்பு ஆண்டு முதலே படிப்புகள் தொடங்கியுள்ளன. ஆண்டுக்கு 40 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படுகிறது.
வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும் அது 2 நாள்களில் வலுப்பெறும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஆக.31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் ஒரு வாரத்திற்கு குடையை மறக்க வேண்டாம்..!
சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விஜய் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்த நல்லகண்ணுவுக்கு நந்தனத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை, சிகிச்சைகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேட்டறிந்தார்.
‘தனுஷ் எனக்கு நல்ல நண்பர் தான்’ என்று கூறி, பரவி வந்த கிசுகிசுவை நாசுக்காக அமைதிப்படுத்திய மிருணாள் தாகூர், தற்போது மீண்டும் வைரலாகிறார். ‘Accidental magic is the best creation’ (தற்செயலான மேஜிக் தான் சிறந்த உருவாக்கம்) என்ற சொல்லுடன் இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டார் தனுஷ். இதற்கு மிருணாள் லைக்கை தட்டிவிட, ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்று நெட்டிசன்கள் மீண்டும் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.