India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சாந்தமான சாத்வீக குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. படிப்பறிவைவிட பட்டறிவைப் பெரிதென கருதும் நீங்கள் சட்ட திட்டங்களை மதிப்பீர்கள். பெற்றோர் & உடன்பிறந்தோருக்காக எதையும் துணிந்து செய்யும் நீங்கள், எவருக்கும் அஞ்சாமல் நேர்மையாக வாழ்வீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
வைகாசி அனுஷம் நட்சத்திர நாளை, திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகையால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது” என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மஞ்சள் பூசணிக்காய் தான் இந்தியாவின் தேசியக் காய்கறியாகும். இதை பரங்கிக்காய் என்றும் அழைக்கின்றனர். மஞ்சள் பூசணி சாகுபடிக்கு வளமான மண் தேவையில்லை. இக்காய்கறி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வைட்டமின் ஏ நிறைந்தது. மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இனிப்பு சுவையுள்ள இப்பூசணிக்காய், அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பாண்டிங் டெல்லி அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரது தலைமையில் கீழ் டெல்லி அணி 2020ஆம் ஆண்டு Runners-up ஆக வந்தது. ஒவ்வொரு சீசனிலும் கோச்களை மாற்றி வரும் PBKSக்கு இந்த முறை பாண்டிங் கோப்பை வாங்கி தருவாரா? கமெண்ட்ல சொல்லுங்க.
உலகத்திலேயே முதலைக்கு மட்டும் தான் இரும்பை சாப்பிட்டாலும், அதை ஜீரணிக்கும் திறன் உள்ளது. இதன் பற்களும், தாடையும் இரும்பை கடிக்கக் கூடிய திறனை பெற்றுள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும், 10 மடங்கு அதிகமான இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யும் திறன் முதலைக்கு உள்ளது. மேலும், இதன் செரிமான செயல்பாடுகளில், ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், இரும்பை செரிமானம் செய்ய உதவுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. 1996 -2001 வரை திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமின்றி, கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் ஜோக் ஆகிவிட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஓய்வு அறிவித்துவிட்டு, மீண்டும் வந்து சிலர் விளையாடுவதாகவும், உலகக்கோப்பையை வென்ற பிறகு, டி20 ஃபார்மேட்டிற்கு Goodbye சொல்வதற்கு இதுதான் மிகச்சரியான நேரம் என தோன்றியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய முடிவே இறுதியானது என்பதால், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2040-க்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2035க்குள் ₹20,193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கவும், ₹1,236 கோடியில் 2028இல் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
‘E-Way Bill’ பதிவு இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பண்டிகை காலம், நிறுவனங்கள் இருப்பு அதிகரிப்பு, கடும் கள அமலாக்க சோதனை காரணமாக ₹10.55 கோடி மதிப்பிலான இ-வே பில் பதிவுகள் உயர்ந்துள்ளன. ₹50,000-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்குள்ளான & மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு CGST விதி 138இன்படி இ-வே பில் கட்டாயமாகும்.
கொரோனா தொற்றின் புதிய திரிபான XEC, 27 நாடுகளில் பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 500 பேருக்கு இந்த தொற்று அறிகுறி இருப்பதாகவும், ஓமிக்ரான் போன்றே இதுவும் மற்றொரு திரிபு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா போன்றே காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு இருக்கும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொண்டால் பாதிப்பை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.