India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ம.பியில் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்து 20 கிராம் கட்டியை அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரிவர சாப்பிடாமல் இருந்த கிளியை பரிசோதித்த மாவட்ட கால்நடை மருத்துவர்கள், கழுத்துப் பகுதியில் கட்டி வளர்வதை கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த செப்.15ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்கியுள்ளனர். சாட்னா மாவட்டத்தில் ஒரு பறவைக்கு அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதை போல், தமிழ் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். சாதி ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை ஏற்க முடியாது எனவும், தங்களது முன்னோர்கள் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘G.O.A.T’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் திரைக்கு வந்த 13 நாள்களில் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், தமிழை தவிர மற்ற மொழிகளில் பெரிய அளவில் வசூல் ஆகாததால் ஆயிரம் கோடி வசூல் இலக்கை அடைவது கடினமே.
ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்.5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. மகளிருக்கு மாதம் ₹2,000, முதியோருக்கு ₹6,000 உதவித்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. மேலும், ₹25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு, ஏழைகளுக்கு இலவச வீடு என வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் அளித்துள்ளது.
குடும்ப சூழல் & பணியிட அழுத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவோர் அதிலிருந்து வெளிவர சில பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவை இதோ 1) பிரச்னைக்கான காரணத்தை ஆராய்ந்து களையுங்கள். 2) மது & புகை பழக்கத்தை கைவிடுங்கள். 3) நண்பர்களுடன் பேசுங்கள். 4) உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். 5) புத்தகம் படியுங்கள், இசையைக் கேளுங்கள். 6) யோகா, தியானம் (அ) உடற்பயிற்சி செய்யுங்கள். 7) பாசிடிவான சூழலில் இருக்க முயலுங்கள்.
இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவி மேலாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Finance, Actuarial, Law, IT, Generalist உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: LLB, CA, CFA, MBA, BE, BSc, BA. சம்பள வரம்பு: ₹44,500. வயது: 21-30. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 20. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு <
செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் இதனை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மக்களவை தேர்தல் வெற்றி தொடர்பாக நவாஸ்கனி MP பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை நவாஸ்கனி மறைத்ததாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கின் விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வருகிற 27ல் தொடங்க உள்ளது. இதில் ஐபோன் 15 வெல்வதற்கான போட்டியை அமேசான் அறிவித்துள்ளது. அமேசான் செயலி, இணையதளம் சென்று ‘Great Indian Festival’ என்பதை க்ளிக் செய்தால், ‘Get Sale Ready’ பேனர் தோன்றும். அதில் ‘Chance to win an iphone 15’ என்பதை கிளிக் செய்தால் Spin & Win போட்டி பக்கத்திற்கு செல்லும். அதை விளையாட வேண்டும். அக்.1ல் வெற்றியாளர்கள் அறிக்கப்படுவர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ள முக்கிய பரிந்துரைகளை இங்கு காணலாம். இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டமாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் போதுமானது. மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை.
Sorry, no posts matched your criteria.