India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய அரசு, அஜித் தோவல், RAW முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ஏஜெண்ட் விக்ரம் யாதவ், தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோர் 21 நாட்களுக்குள் பதிலளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.
ஜியோ மீண்டும் 1 வருடம் இலவச offer, நிபந்தனையுடன் அறிமுகம் செய்துள்ளது. ₹3,599 ரீசார்ஜ் செய்தால் ஆண்டுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு உள்ளிட்டவற்றை ஜியோ வழங்குகிறது. இந்நிலையில், ₹50 செலுத்தி Jio fiber book செய்து, அந்த இணைப்பு பெறுவோருக்கு ₹3,599 திட்டத்தை இலவசமாக வழங்குகிறது. Fiber இணைப்பை புதிதாக பெறுவோருக்கு offerஇல் 3 மாத இன்டர்நெட், 13 OTT, 800 இணையதள TV சேவைகளை அளிக்கிறது.
ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,100 வழங்கப்படும் என BJP அறிவித்துள்ளது. மானிய விலையில் ₹500க்கு சமையல் சிலிண்டர், மருத்துவம், பொறியியல் படிக்கும் SC, OBC பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை , அக்னி வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மாதம் ₹2000 வழங்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தது.
உலகில் 60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீர் தொற்று (UTI) பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்த உடல் உபாதை தொடர்ந்து ஏற்பட Escherichia coli பாக்டீரியா முக்கிய காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Fridge-ல் நீண்ட நாள் இறைச்சியை பதப்படுத்தி உண்பது, E coli பாக்டீரியா தொற்று ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, இறைச்சிகளை அன்றே சமைத்து சாப்பிடுவது மிகச்சிறந்தது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி புதிதாக போயிங் 737 MAX 9 விமானத்தை ₹1000 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்தியாவில் எந்தவொரு தொழிலதிபரிடமும் இந்தளவுக்கு விலையுயர்ந்த விமானம் கிடையாது. USAவில் தயாரிக்கப்பட்ட இவ்விமானத்தில், 11,770 KM நிற்காமல் பயணிக்கலாம். இதன் உள்கட்டமைப்பு ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டு பல கோடி செலவில் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரிடம் 10 ஜெட் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
அடுத்த 10 நாள்களில் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று அவர் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. இதற்காக CM ஸ்டாலின் தலைமையில் திமுக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையும் நடந்தது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ரூ.2,104 கோடி மதிப்பிலான சந்திரயான்-4 திட்டம் விரைவில் தொடங்குகிறது. நிலவில் தரையிறங்கி பிறகு மீண்டும் பூமிக்கும் திரும்புவதே இந்த திட்டத்தின் நோக்கம். 2040இல் மனிதரை நிலவுக்கு அனுப்பும் முயற்சிக்கு, இந்த பயணம் அடிப்படையாக இருக்கும். 2035இல் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கவும், நிலவு பற்றிய புரிதலை மேம்படுத்தவும் இந்த பயணம் உதவும். 2027இல் சந்திரயான்-4 விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று 11 மணிக்கு <<14138840>>வினா – விடை<<>> பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நரம்புக் கருவிகள் 2) யுரேனஸ் 3) அழுத்தமானி 4) சீனா 5) பேரீச்சை மரம் 6) எறும்பு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
முதல் டெஸ்டில் IND வீரர்களை (4 wk) தனது பந்துவீச்சு மூலம் BAN பவுலர் ஹசன் மஹ்மூத் திணறடித்து வருகிறார். 24 வயதான வேக பந்துவீச்சாளரான இவர், இந்தாண்டு SL-க்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார். முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 6 wkt வீழ்த்தினார். டி20 போட்டிகளில் 18 wkt , 22 ODI போட்டிகளில் 30 wkt வீழ்த்தியுள்ள அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.
ஜம்மு-காஷ்மீரை 3 குடும்பங்கள் அழித்து விட்டதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டபேரவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீநகரில் PM மோடி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரின் அழிவிற்கு பொறுப்பு என்று சாடினார். இந்த 3 குடும்பங்களும் யாரும் தங்களை கேள்விகளே கூடாதென நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.