India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதுவிற்பனையாகும் “ஏ” பிரிவு” கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வாங்க முடியும்.
கால் பாதங்களில் சிலருக்கு வெடிப்பு பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பதை தெரிந்து காெள்ளலாம். வைட்டமின் ஏ சத்தானது தோல் தாெடர்பான பிரச்னையை சரி செய்யும். அந்தச் சத்து பற்றாக்குறை எனில் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். ஆதலால் வைட்டமின் ஏ சத்து கிடைக்க கீரை வகைகள், கேரட், முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டுமென அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நந்தன்’ திரைப்படம் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்துவிட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடிவிடுவதாகவும், சமூகநீதியின் கருப்பு வரலாற்றை அப்படம் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் குரோம், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரோம் 129.0.6668.100, 129.0.6668.89 பிரவுசர்கள், ஆன்ட்ராய்டு 12, 12L, 13, 14, 15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைபாடுகளை பயன்படுத்தி கணினிகள், மொபைலை ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளை திருடக்கூடும். இதைத் தவிர்க்க உடனடியாக அதை அப்டேட் செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.
ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் முறை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சில ஆலோசனைகளை அளித்துள்ளனர். 1) 20%ஆக இருக்கும்போது சார்ஜ் போடுவது நல்லது. இதனால் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும். 2) சார்ஜ் போடுகையில் போனில் கேமிங், வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் 3) 80%-90% சார்ஜ் இருந்தால் போதுமானது 4) 100%க்கும் மேல் சார்ஜ் போடக் கூடாது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள், பொதுமக்கள் வசிப்பிடங்கள், கார் போன்ற வாகனங்களில் நுழைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரத்தில் தயக்கமின்றி தீயணைப்புத் துறை, வனத்துறையிடம் மக்கள் உதவி கோரலாம். இதற்காக, சென்னை பகுதி மக்களுக்கு 044 – 22200335, 1903 ஆகிய எண்களும், மற்ற மாவட்ட மக்களுக்கு 1077 என்ற அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
சூரிய உதயத்தை முதன்முதலில் காணும் இந்திய மாநிலம் எது என அனைவருக்கும் தெரியுமா என்றால் சந்தேகமே. அதை இங்கு தெரிந்து கொள்வோம். அருணாசலப் பிரதேச மாநிலத்தின் அஞ்சோவ் மாவட்டத்தில் உள்ள டோங்கா கிராமமே முதலில் சூரிய உதயத்தைக் காண்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,240 மீட்டர் உயரத்தில் அந்த பகுதி உள்ளது. இந்தியா – சீனா எல்லையில் உள்ள அப்பகுதி சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. SHARE IT
குரூப் 4 தேர்வு குறித்த அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மனிதவள மேலாண்துறை அமைச்சர் கயல்விழி பதிலடி கொடுத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் முட்டுக்கட்டை போட்ட ஆளுநரை கண்டிக்காத அன்புமணி, குரூப் 4 பணியிடங்களுக்கு ஏன் கவலைப்படுகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தபோது அன்புமணி எங்கே போனார் எனவும் வினவியுள்ளார்.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்க சில பரிந்துரைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். அவை என்னென்ன? 1) டயட்டை தொடர்ந்து கடைபிடித்தல் 2) உப்பை குறைந்த அளவில் சேர்ப்பது 3) தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் 4) உடல் எடையை சீராக பராமரித்தல் 5) மதுவை தவிர்த்தல் 6) புகைபிடிப்பதை கைவிடுதல் 7) சரியான நேரத்தில் தூங்கி எழுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.
Sorry, no posts matched your criteria.