India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருப்பதி எழுமலையானை தரிசித்துள்ளார். சென்னையில் நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடவுள்ளார். தொடங்கும் தொழில் தழைத்தோங்க ரவி மோகன் ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனை தரிசித்திருந்தார்.
2021 பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று EPS குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக கேஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை பற்றி கேட்டால், 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சையாக பொய் சொல்கிறார்கள் என சாடிய அவர், 2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
அனைவரும் பார்த்து ரசிக்கும் நிலவில், சிலர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என 1967-ல் ஐநாவின் The Outer Space Treaty ஒப்பந்தம் சொல்கிறது. விண்வெளியில் உள்ள நிலா, கோள்கள், இவ்வளவு ஏன் ஒரு விண்கல்லை கூட எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது, அங்கு அணு ஆயுத சோதனைகளை நடத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. SHARE.
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி(MMK) உள்ளிட்ட <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ஏன் தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை சென்னையில் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2019 முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத தங்கள் கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. *கோகுல மக்கள் கட்சி, *இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, *இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், *மக்கள் தேசிய கட்சி, *மனிதநேய மக்கள் கட்சி, *பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை நாளை சென்னையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பல மணி நேரம் Shorts வீடியோக்களை பார்ப்பது, மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என சீனாவின் Tianjin Normal University கண்டறிந்துள்ளது. இது போன்ற வீடியோக்கள் பார்க்கும்போது அதிகமாக டோபமைன் சுரப்பதால், போதைக்கு அடிமையாவதற்கு இணையான ஒரு நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், செய்யும் வேலையில் கவனம் குறைவது, ஞாபக சக்தி பிரச்னை போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தம், வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக, ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(ஆக.26) தொடங்கி 31-ம் தேதி வரை சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் TNSTC செயலி, www.tnstc இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூர்ந்து திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் பற்றி தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீங்கா நினைவில் வாழும் அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
குடும்ப தகராறுகளில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக உதவும் BNS சட்டங்கள்:
◆115(2): ஒரு பெண், ஆணுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தலை கொடுத்து கொடுமைப்படுத்தியது நிரூபணமானால், ஒரு வருட சிறையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்படும்.
◆206: ஆணுக்கு எதிராக குடும்ப தகராறில், பெண் பொய் சாட்சி அளித்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.