India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1979: அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கப்பட்டது
1948: நடிகை அன்ணபூர்னா பிறந்தார்
1965: பாப் பாடகி மால்குடி சுபா பிறந்தார்
1970: இந்திய அணி முன்னாள் வீரர் அணில் கும்பிளே பிறந்தார்
1981: கவி பேரரசர் கண்ணதாசன் மறைந்தார்
1992: நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தார்
1992: நடிகை பிரனீதா சுபாஷ் பிறந்தார்
– சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
* எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது * மனிதன் தூங்கும் முன் கோபத்தை மறந்துவிட வேண்டும் * உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி * ஒழுக்கமான வீட்டிற்குச் சமமான பள்ளியும் இல்லை, நல்லொழுக்கமுள்ள பெற்றோருக்கு நிகரான ஆசிரியரும் இல்லை *ஒரு கோழை அன்பை வெளிப்படுத்த இயலாது. அது துணிச்சாலனவர்களின் உரிமை. SHARE IT.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார். கூட்டணி கட்சித் தலைவரான உமர் முதல்வராவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
கவிப்பேரரசு கண்ணதாசனின் 39-வது நினைவுநாள் இன்று. சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்த அவரின் இயற்பெயர் முத்தையா ஆகும். தமிழ் இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் முத்திரை பதித்து, கலை ஆளுமையாகவே வாழ்ந்து மறைந்தார். 7,500க்கும் மேல் திரைப்படப் பாடல்கள், 5,000க்கும் மேல் கவிதைகள் உள்ளிட்டவை எழுதி ‘கவியரசு’ அழியாப்புகழ் பெற்றார். மரணமில்லா அக்கவிஞரை இன்று நினைவில் கொள்வோம்.
இன்று (அக். 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது போல நெய்யை தினமும் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1) மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கு வழிவகுக்கும் 2) கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் 3) உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 4) செரிமான பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் 5) நெய்யில் உள்ள அபரிதமான கொழுப்பு, சிறுநீரக பிரச்னைக்கு வழிவகுக்கும். SHARE IT.
கோலி தலைமையிலான முந்தைய இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. ரோஹித் தலைமையில் இந்திய அணி 12இல் வென்றுள்ளது. நியூசி.க்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் வென்றால், 15 போட்டிகளில் வென்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை ரோஹித் புரிவார். இதேபோல் 248 ரன்கள் குவித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 காலத்தில் 1,000 ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைப்பார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. புதுச்சேரி- நெல்லூர் இடையே வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று IMD கூறியுள்ளது. பிறகு அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வடதமிழக பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.
இன்று (அக். 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு குவிண்டாலுக்கு ₹150 அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரபி பருவ 6 வகை பயிர்களுக்கான MSP-யை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோதுமைக்கு ₹2,425ஆகவும், கடுகுக்கு ₹300 உயர்த்தப்பட்டு ₹5,950, சூரியகாந்திக்கு ₹140 உயர்த்தப்பட்டு ₹5,940ஆக நிர்ணயிக்கப்பட்டது. மசூர் பருப்பு (₹275), கொண்டை கடலைக்கும் (₹210) அதிகரிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.