India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
▶அக். 17 (புரட்டாசி 31) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: ரேவதி ▶சந்திராஷ்டமம்: மகம், பூரம். SHARE பண்ணுங்க.
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரத்தை நிறுத்திவிடும் என்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், டெல்லியில் எப்படியேனும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தால், டெல்லியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் நிறுத்திவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அமித் ஷா, பண்டிகைகாலத்தை கருத்தில் காெண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பூமிக்கு மிக அருகில் அரிதாக வரும் சுசின்ஷான் வால் நட்சத்திரத்தை இந்தியாவிலிருந்தும் பலர் பார்த்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பலரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த மாதம் 28ஆம் தேதி சூரியனுக்கு அருகே வந்த இந்த வால் நட்சத்திரம், தற்போது சூரிய குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறது. மீண்டும் இந்த நட்சத்திரத்தை 80,000 ஆண்டுகளுக்குப் பின்னரே பார்க்க முடியும்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் அதி கனமழை எச்சரிக்கையை நேற்றும், இன்றும் வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். ஆனால் நேற்றிரவு மட்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் எங்கும் அதி கனமழையாே, மிக கனமழையோ இல்லை. இதனால் வானிலை மையம் தவறாக கணித்ததா? இல்லை கணிப்பு பொய்த்து விட்டதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
அதி கனமழை மட்டும் பெய்திருந்தால் திமுகவின் சாயம் வெளுத்திருக்கும் என்று அதிமுக கிண்டல் அடித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த EX சபாநாயகர் ஜெயக்குமார், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாததால் மழை குறைந்துவிட்டது என்று சாடினார். சென்னையில் மழைநீர் செல்ல இடமில்லாமல் கழிவுநீருடன் கலந்து செல்கிறது என்றும், ஸ்டாலினின் கொளத்தூர் தாெகுதியிலேயே இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் விமர்சித்தார்.
=>இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி பருகலாம்.
=>பூண்டு கலந்த பால், உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
=>காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் கரைவதோடு உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். SHARE IT
◙மேஷம் – வரவு
◙ரிஷபம் – ஆக்கம்
◙மிதுனம் – நன்மை
◙கடகம் – உதவி
◙சிம்மம் – சுகம்
◙கன்னி – வாழ்வு
◙துலாம் – கவனம்
◙விருச்சிகம் – நலம்
◙தனுசு – பயம் ◙மகரம் – புகழ்
◙கும்பம் – லாபம் ◙மீனம் – ஜெயம்
சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை மையம் அறிவித்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.