India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், குளோபல் செஸ் லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் 85% மக்கள் அசைவம் சாப்பிடுவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக நாகாலாந்தில் 99.8% பேர் அசைவம் சாப்பிடுபவர்களாக உள்ளனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் 99.3%, கேரளாவில் 99.1% மக்கள் அசைவம் சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் 97.65% அசைவம் சாப்பிடும் மக்களுடன் தமிழ்நாடு 6 ஆவது இடத்தில் உள்ளது. நீங்கள் சைவமா? அசைவமா? கமெண்ட் பண்ணுங்க.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என பேச்சுகள் அடிபடும் நிலையில், இதுகுறித்து செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். “உதயநிதிக்கு அனைத்து திறமைகளும் இருக்கின்றன. மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராக சிறப்பாக செயல்படுபவர். மக்களுக்காக உழைப்பவர். அவர் ஏன் துணை முதல்வராக வரக் கூடாது? உதயநிதிக்கு அந்தப் பதவி கிடைத்தால் காங்கிரஸ் வரவேற்கும்” என்றார்.
தலைநகர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது மழை குறுக்கிட்டாலும், கலைந்து செல்லாத ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இசையை ரசித்தனர். இதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, கும்பகோண மக்களின் ஆதரவை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக பேட்டியளித்த இயக்குநர் மோகன்ஜியை திருச்சி போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். கைது செய்ய முகாந்திரம் உள்ளதாக கூறிய நீதிபதி, எனினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் சரியல்ல” என்றும் கூறினார்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்த நிலையில், 2வது போட்டி கான்பூரில் வரும் 27ஆம் தேதி முதல் அக்.1 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கான்பூர் சென்றடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2வது போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
டெல்லியில் புதிய ஃபோன் வாங்கியதற்கு ட்ரீட் தராததால் 16 வயது சிறுவனை, அவரது நண்பர்களே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புதிய ஃபோன் வாங்கிய சச்சின், ட்ரீட் தர மறுத்ததால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, 3 நண்பர்கள் சேர்ந்து, சச்சினை குத்திக் கொலை செய்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை டெங்குவிற்கு 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், வேறு எந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் இல்லை என கூறினார். மேலும், நிஃபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் – கேரளா எல்லையில் தீவிர சோதனை நடப்பதாகவும் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தேவையில்லாமல் பதற்றத்தை பரப்ப வேண்டாம் என பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் அறிவுரை கூறியிருந்தார். இந்நிலையில், “சனாதனம் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து பேசுங்கள்” என பவன் பதிலளித்திருந்தார். இந்நிலையில், தனது பேச்சை பவன் கல்யாண் தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும், திரும்பி வந்து அதற்கு விளக்கமளிப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.