News September 25, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ராணுவ விசாரணை தொடர்பான மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ➤துருக்கிக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க விதித்த தடையை அமெரிக்கா நீக்கக் கூடுமெனத் தகவல் வெளியாகியுள்ளது. ➤இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ➤வெனிசுலா அதிபர் மதுரோக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து அர்ஜென்டினா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

News September 25, 2024

JUST NOW: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

image

ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 26 தொகுதிகளுக்கு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 25.7 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அக்.1ல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

News September 25, 2024

JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலை

image

இந்தோ திபெத் படையில் கான்ஸ்டபிள் நிலை பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 545 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலைக்கான விண்ணப்பபதிவு ஆன்லைனில் அக்டோபர் 8ம் தேதி தொடங்க உள்ளது. கடைசி தேதி நவம்பர் 6ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் காணலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

News September 25, 2024

இன்று இதை செய்தால் கடன் தீரும்

image

இன்று தேய்பிறை அஷ்டமி ஆகும். இன்றைய நாளில் பைரவ வழிபாடு மேற்கொள்வது மிகச்சிறப்பானது என்று ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராகு கால வேளையான மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் கோயிலுக்கு சென்று பைரவருக்கு செந்நிற மலர்கள் சாத்தி, தீபமேற்றி மனமுருகி வேண்டிக் கொண்டால் காரியத் தடைகள் நீங்கும். வழிபடுவோரின் கடன் தேய்ந்து முழுவதும் காணாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.

News September 25, 2024

மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்

image

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி PM மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், BC சமூக பிரதிநிதியாக PM பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை, முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். எனவே, சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 25, 2024

இன்று இடி-மின்னலுடன் மழை: RMC

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC கணித்துள்ளது. வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பொழிய வாய்ப்புள்ளது என்று RMC தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், 27, 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. SHARE IT

News September 25, 2024

இட்லி கடை படத்தில் நான் இல்லை..

image

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், ”எனக்கும் தனுஷ் சார் மிகவும் பிடிக்கும், அவருடைய மிகப் பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப் படுகிறேன் ஆனால் இப்பொழுது அவர் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் விளக்கமளித்துள்ளார்.

News September 25, 2024

சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டதில் 2 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

News September 25, 2024

செப் 25: வரலாற்றில் இன்று

image

1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
1978 – சான் டியாகோவில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர்.
1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது.
2003 – ஜப்பானின் ஒக்காய்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800 பேர் காயமடைந்தனர்.
2020 – எஸ். பி. பாலசுப்ரமணியம் நினைவு தினம்

News September 25, 2024

உக்ரைனை கைவிட மாட்டோம்: ஜோ பைடன்

image

அமைதி நிலவும் வரை உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். U.N பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பைடன், நேட்டோ அமைப்பு ஒன்றாக நின்றதால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தோல்வியடைந்தது என்ற அவர், அமெரிக்கா உக்ரைனை ஒருபோதும் கைவிடாது என்றார். மேலும் சூடானில் 17 மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!