India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹாங்சோவ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் – விஜய்சுந்தர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் பிரான்ட்சென் – ஹென்ரிக் இணையுடன் இந்த இணை மோதியது. 1 மணி 49 நிமிடம் நடந்த போட்டியில் 4-6, 7-6, 10-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி பட்டம் வென்றது. ஜீவனுக்கு இது 2ஆவது சர்வதேச பட்டமாகும்.
திரையரங்குகளில் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும், 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் வசூல் பாதிப்பைத் தடுக்க பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரங்கள் கழித்து OTT-இல் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விலக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க, நேற்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு நவம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதே மாதம் 21ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CM ஸ்டாலினுக்கு ஜால்ரா மட்டுமல்ல, பல்லக்கும் தூக்குவேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமக்கு கட்சியை விட நாடே முக்கியம் என்றும், நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது என்றால் பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாசிச சக்திகளுக்கு எதிராக ஸ்டாலின் நிற்பதாகவும், அதனால் அவரை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈவிகேஎஸ் கூறியது சரியா? உங்கள் கருத்தை பதிவிடுங்க.
பஞ்சபூத தலங்களில் வான் தலமான ஆடவல்லாரின் தில்லை கோயிலில் ஈசன் ஆகாய வடிவில் இருக்கின்றார். கனகசபையான இங்கு நடராஜரின் வலது பக்கத்தில் உள்ள சிறிய வாயிலில், அங்குள்ள திரை அகற்றப்பட்டு, தொங்கவிடப்பட்டு இருக்கும் (இறை திருவுருவம் இல்லாத) தங்க வில்வ மாலைக்கு தீபாராதனை காட்டப்படும். அதாவது, தொடக்கமும் முடிவுமற்ற ஆகாயத்தைப் போல, ஈசன் இருப்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியமாகும்.
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து கடந்த 5 நாள்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 50 குழந்தைகள், முதியோர்கள் என 569 பேர் பலியான நிலையில், 1,850 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று பெய்ரூட்டில் நடைபெற்ற தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார்
➤இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கவுன்சில் கூட்டம் மும்பையில் இன்று (செப்.25) நடக்கிறது. ➤மக்காவ் ஓபன் பேட்மிண்டனின் 2ஆவது சுற்றுக்கு இந்தியாவின் திரிஷா – காயத்ரி இணை முன்னேறியது. ➤பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு ₹50 லட்சம் ரொக்கப்பரிசு
அளிக்கப்படுமென BAI அறிவிப்பு. ➤இரு போட்டி கொண்ட தொடரில் இந்தியா, ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகள் அக். 23, 24இல் மோதவுள்ளன.
சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் வராகி மீது பண மோசடி வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சமீபத்தில் சார்பதிவாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது 40க்கும் மேற்பட்டோர் பண மோசடி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தன்னிடம் ₹5 லட்சம் முறைகேடு செய்ததாக பாரதி என்பவர் அளித்த புகாரில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேற்கு ரயில்வேயில் 5,066 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அப்ரன்டிஸ் அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10, 12ம் வகுப்புகளில் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்கான விண்ணப்பப்பதிவு rrc-wr.com இணையதளத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க அக். 22ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.
உதயநிதியை துணை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அதிமுக EX அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், உதயநிதிக்கு முடிசூட்டி பார்ப்பதே ஸ்டாலின் குறிக்கோள், மக்கள் பிரச்னை பற்றி அக்கறை கிடையாது என்று விமர்சனம் செய்தார். உதயநிதியை உடனடியாக துணை முதல்வராக்கினால் எதிர்ப்பு எழும் என எண்ணி, படிப்படியாக தகவலைக் கசியவிட்டு மக்களிடம் திணித்து விட்டதாகவும் அவர் சாடினார்.
Sorry, no posts matched your criteria.