India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<14189300>>வெள்ளி விலை<<>> ₹1 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹98க்கும், 1 கிலோ வெள்ளி ₹98,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹3 உயர்ந்து ₹101ஆக விற்பனையாகிறது. இதேபோல் 1 கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1 லட்சத்தைக் கடந்து, ₹1.01 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. 21ம் தேதி முதல் மாறாமல் இருந்த விலையில் இன்று மட்டும் ₹3,000 அதிகரித்துள்ளது. SHARE IT.
தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியும், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் அளித்துள்ளது. FED வங்கி வட்டி விகிதக் குறைப்பு, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம், டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பாதுகாப்பு கருதி தங்கம் & ETFஇல் பலர் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாகவே கடந்த வாரத்தில் (10 கிராம் 24 c தங்கத்தின் விலை ₹77,020) அபரிமிதமாக உயர்ந்தது.
ராகுலை தேச துரோகி என விமர்சித்த H.ராஜாவின் நாக்கை வெட்டுபவருக்கு ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பெரம்பலூர் காங்., தலைவர் சுரேஷ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட SP அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். பின்னர் பேசிய அவர், H.ராஜா மட்டுமின்றி ராகுலை மிரட்டிய சஞ்சய் கெய்க்வாட் நாக்கை வெட்டுபவருக்கு ₹1 கோடி வழங்கப்படும் என்றார்.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹480 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹7,000ஆகவும், 1 சவரன் தங்கம் ₹56,000ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ₹60 அதிகரித்து ₹7,060 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ₹480 உயர்ந்து ₹56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
இந்தியாவில் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் கட்டணங்களை வோடாபோன் ஐடியா (Vi) மீண்டும் உயர்த்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிறுவன சிஇஓ அக்ஷய முந்த்ரா இதுகுறித்து பேசுகையில், வோடாபோன் ஐடியா நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் 2025 மத்தியில் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், Vi 10%- 25% வரை கட்டணம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை அருகே காருக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமனசமுத்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 5 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகே முழு விவரமும் தெரிய வரும்.
ODIஇல் தொடர்ந்து 14 போட்டிகளில் வென்ற ஆஸி.யின் சாதனைக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலில் பேட் செய்த ஆஸி., 304 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. 37.4 ஓவர்களில் 254 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தபோது மழையால் போட்டி தடைபட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 46 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் புரூக் 110 ரன் அடித்து அசத்தினார்.
விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு யுவன்சங்கர் ராஜா பதிலளித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரிடையாக பதிலளிக்காமல், விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என்று கூறினார். விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் நிச்சயம் இசையமைத்து கொடுப்பேன் என்றும் யுவன் குறிப்பிட்டார். விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு தொண்டாற்றிய முதியோர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் ₹4,000 (3,500 + ₹500 மருத்துவப்படி) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 58 வயது நிரம்பியோர் உரிய ஆவணங்களுடன், தமிழ் வளர்ச்சிதுறை அலுவலகத்தில் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.31.
ஆப்பிளின் ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கு டிஸ்ப்ளே அசெம்பிளி தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க தைவானின் Foxconn நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரகடத்தில் 5 லட்சம் சதுர அடி நிலத்தில் ரூ.8,300 கோடியில் ஆலையை அமைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எப்போது அது அமைக்கப்படும் எனத் தகவல் இல்லை. விரைவில் சாத்தியமாக வாய்ப்பிருப்பதாக மட்டும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.