India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்துக்காக இயக்குனர் மோகன்ஜி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனிமலை அடிவாரத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோயில் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றது உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பதிவான வழக்கில் மோகன்ஜி நேற்று கைதாகி, பின்பு விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக கூட்டணியில் விரிசலா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணியில் விரிசலோ, சலசலப்பாே இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்று கூறினார். எக்ஸ் பக்க வீடியோவை விவாதத்துக்கு பலரும் எடுத்து கொண்டதாகவும், அந்த வீடியாேவால் கூட்டணிக்கு சிக்கல் இல்லை என்றும் தெரிவித்தார்.
நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பல்வேறு சாதனைகளை படைக்க காத்துள்ளார் அஸ்வின். நான்காவது இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்தினால், 4வது இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவர். டெஸ்டில் தற்போது 522 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அஸ்வின் இன்னும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால் நாதன் லயனை (530) பின்னுக்கு தள்ளி 7வது இடம் பிடிப்பார்.
தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடு, தொண்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தவெக முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் அக்.27இல் நடைபெறுகிறது.
விஷ்ணு விஷால் கடந்த 2022ல் நடிக்க ஒப்பந்தமான ‘ஆர்யன்’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷ்ணு விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதன வன்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி மேலாண்மை முறையை DGFT டிச. 31 வரை நீட்டித்துள்ளது. அதன் அறிக்கையில், “2025 ஜனவரி முதல் இறக்குமதி செய்யவுள்ள நிறுவனங்கள் தங்களது இறக்குமதியின் அளவு & மதிப்பை அரசிடம் பதிவு செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, அவற்றுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்.27 – அக்.2 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்.6 ஆம் தேதி வரை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறிய அமைச்சர் இன்று அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
கோயில் யானைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு மீது சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்காேரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மனு குறித்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு CM ஸ்டாலின் இன்று ஊக்கத் தொகை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ₹5 கோடிக்கான காசோலைகளை ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டாேர் கலந்து கொண்டனர்.
1) ஒரு மீட்டர் என்பது எத்தனை அடிக்கு சமம்? 2) நவீன எழுத்துக்கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 3) SEBI என்பதன் விரிவாக்கம் என்ன? 4) மயிலின் அறிவியல் பெயர் என்ன? 5) பண்டைய தமிழி எழுத்துக்களை ‘தமிழ் பிராமி’ என அழைத்த தமிழறிஞர் யார்? 6) ஆன்டிஜென்கள் இல்லாத ரத்த வகை எது? 7) பூவின் ஆண் & பெண் இனப்பெருக்க பகுதிகளின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Sorry, no posts matched your criteria.