News September 25, 2024

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி

image

கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷனில் ‘கைதி 2’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்தி. அடுத்த ஆண்டு (2025) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அப்படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது.

News September 25, 2024

BREAKING: 5 நாள்களுக்கு இடி-மின்னலுடன் மழை

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News September 25, 2024

கோட்சே போல பேசுகிறார் ஆளுநர்: அப்பாவு

image

ஆளுநர் ஆர்.என். ரவி கோட்சே போல பேசுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். மதசார்பின்மை ஐரோப்பாவில் தோன்றியது என்றும், ஆனால் பாரதம், இந்து மதம் ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாதென்றும் ஆளுநர் பேசியது குறித்து அப்பாவுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்ட 15,17 பிரிவை படித்து பார்த்தபிறகு பேச வேண்டும் என்றார்.

News September 25, 2024

முதல் ‘சர்வதேச’ கிரிக்கெட் போட்டி எங்கு நடந்தது?

image

உலகின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது, நியூயார்க்கில் 24 செப் 1844 அன்று, அமெரிக்காவின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது. இருநாள் போட்டியாக நடந்த இப்போட்டியில், USA & கனடா அணிகள் மோதின. USA அணி வெறும் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கனடா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன், பரிசுத் தொகையான $1,000-ஐ கனடா கைப்பற்றியது. இருப்பினும் இது முதல் டெஸ்ட் போட்டியாக அங்கீகரிக்கப்படவில்லை.

News September 25, 2024

குற்றவியல் சட்டங்கள்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

image

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த 3 சட்டங்களுக்கும், ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனு தொடுத்திருந்தது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News September 25, 2024

விஜய் கன்னத்தில் சந்திரசேகர் பளார்.. பிரபல இயக்குநர் பேட்டி

image

விஜய் கன்னத்தில் அவரது தந்தை சந்திரசேகர் பளார் என அறைந்ததாக இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தபோது, தனியாக தங்க அறை ஒதுக்காததால் கோபமடைந்து விஜய் சென்று விட்டார். இதையடுத்து அங்கு வந்த சந்திரசேகர், அனைவர் முன்பும் விஜய் கன்னத்தில் பளார் என அறைந்து அறிவுரை வழங்கியதாக களஞ்சியம் கூறியுள்ளார்.

News September 25, 2024

BIG BREAKING: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

image

தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அக்.2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடுமுறை குறுகிய நாளே இருப்பதால் விடைத்தாளை திருத்த கூடுதல் நாள் தேவை என ஆசிரியர்கள் காேரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்து விடுமுறையை நீட்டித்து, அக். 7இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News September 25, 2024

மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா? தவெக விளக்கம்!

image

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியானது. இத்தகவலை மறுத்துள்ள அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை காவல்துறை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளுக்கு கட்சி சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 25, 2024

தள்ளுபடி விற்பனை குறித்த குற்றச்சாட்டை மறுத்த அமேசான்

image

விற்பனையாளர்களுக்கான தளமாக அமேசான் சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் அபினவ் சிங் தெரிவித்துள்ளார். அதிக தள்ளுபடிகள் தங்கள் விற்பனையை பாதிக்கின்றன என்ற சில்லறை விற்பனையாளர்களின் குற்றச்சாட்டுகள் தவறானதெனக் கூறிய அவர், வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் ஆர்டர்கள், மார்ஜின்கள் & விலையை அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்தார்.

News September 25, 2024

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு

image

தயாநிதி மாறன் தாெடுத்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் முறையாக செலவிடவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். இதில் இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது அக்.16இல் உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

error: Content is protected !!